புதன், 5 ஜூலை, 2017

திரிகடுகம் காபி...



திரிகடுகம் காபி...

*தேவையானவை:*

 மிளகு – 30 கிராம்,

 சுக்கு – 50 கிராம்,

 திப்பிலி – 5 கிராம்,

 கருப்பட்டி, காபி தூள் – தேவையான அளவு.

*செய்முறை:*

மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்து, அதனுடன் காபி தூள், திரிகடுகம் தூள் கலந்து கொதிக்கவைத்து சூடாகப் பருகலாம்.


*பலன்கள்:*

 சித்த மருத்துவத்தில் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ எனச் சொல்வார்கள்.

 *சுக்கை தோல் சீவித்தான் பயன்படுத்த வேண்டும்.*

மிளகு, பசியைத் தூண்டும்; பித்தத்தைச் சமப்படுத்தும்; உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும்.

திப்பிலி, கோழையைப் போக்கும். சளிப் பிரச்னைகள் நீக்கி, உடலை உற்சாகம் அடையச் செய்யும்.

 பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும்.

 மழைக்காலத்தில் காலை – மாலை இந்த காபி குடித்துவருவது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக