இஞ்சி ரவை தோசை (GINGER RAVA DOSA)
*தேவையான பொருட்கள்*
மைதா - 2 கப்,
அரிசிமாவு - 2 கப்,
ரவை - 1 கப்,
கடுகு,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
பச்சை மிளகாய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
புளித்த தயிர் - 2 கப்,
கறிவேப்பிலை ,
மல்லித்தளை - சிறிது,
பொடியாக நறுக்கிய வெங்காயம்
எண்ணெய் - கால் கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
*செய்முறை*
2 கப் தயிரில் 2 கப் தண்ணீர் விட்டுக் கடைந்து கெட்டியான மோராக்கவும்.
அதில் மைதா, அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் ரவையை வறுத்து, அந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய், இஞ்சிதாளித்துக் கலவையில் சேர்க்கவும்.
கலவை பால் மாதிரி நீர்க்க இருக்க வேண்டும்.
தோசைக் கல்லைக் காய வைக்கவும். மாவை ஒரு டம்ளரில் எடுத்து, கல்லின் ஓரத்திலிருந்து நடுப்பகுதிக்கு சுழற்றி ஊற்றவும். வார்க்கக்கூடாது.
அதன் மேல் பச்சை வெங்காயத்தையும், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் தூவி, பொன்னிறமாக வேகும்வரைவிட்டு எடுத்துப்பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக