முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இந்த மாஸ்க்கை போடுங்க...
பாதி ஆப்பிளை எடுத்து தோலுரித்து, துண்டுகளாக்கி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இலைகளை சேர்த்து 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஆப்பிள் பேஸ்ட் மற்றும் 1 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து நன்கு கலந்து, அதோடு 1 துளி கிராம்பு எண்ணெய் சேர்க்க வேண்டும்.
பிறகு அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனால் தேனில் உள்ள அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் சி, சரும செல்களை புத்துயிர் பெறச் செய்து, ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
அடுத்து முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை மேக்கப் போட்டிருந்தால், மைல்டு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
மாஸ்க் நன்கு காய்ந்த பின், சிறிது நீரைத் தெளித்து, மென்மையாக 2 நிமிடம் ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இறுதியில் முகத்தை துணியால் துடைத்துவிட்டு, சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகத்தில் உள்ள அசிங்கமான முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் மறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக