அருகம்புல் ஜூஸ்
*தேவையான பொருட்கள் :*
அருகம்புல் - 1 கட்டு
இஞ்சி - சிறிய துண்டு
தண்ணீர் - தேவையான அளவு
*செய்முறை :*
•• இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும்.
•• அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
•• இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
•• விருப்பபட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக