நினைவுத் திறன் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் அற்புத பானங்கள்!
மிக்ஸியில் 1 கப் பால், வாழைப்பழம், 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார். இந்த பானத்தை குடித்தால், ஞாபக மறதி தடுக்கப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கும்.
ஒரு கப் பெர்ரி பழங்களை மிக்ஸியில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சில துண்டுகள் அன்னாசிப் பழம், 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகள் மற்றும் 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்த பானத்தைக் குடித்து வந்தால், மூளையினுள் உட்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
மிக்ஸியில் ஒரு வாழைப்பழத்தைப் போட்டு, அதோடு 2 டேபிள் ஸ்பூன் சியா விதைகள், 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள், 1 கப் சோயா பால் மற்றும் 1 ஸ்பூன் புரோட்டீன் பவுடர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பானம் சுவையாக இருப்பதோடு, மனதை ரிலாக்ஸாகவும், புத்துணர்ச்சியுடனும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.
மிக்ஸியில் 1 கப் மாதுளை ஜூஸ், 1/2 கப் ஸ்ட்ராபெர்ரி, 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 கப் தயிர் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூளையின் சக்தியை மேம்படுத்தும்.
1 கப் பசலைக் கீரையுடன், 1 கப் மாம்பழம், 1 அவகேடோ பழம் மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் குடித்து வந்தால், அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோயைத் தடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக