பசியைத் தூண்டும் மிளகு சீரக சூப்.
*தேவையான பொருட்கள் :*
பாசிப்பருப்பு - 100 கிராம்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
பிரியாணி இலை - 2,
வெங்காயம் - 2,
கேரட் - 2,
சீரகம், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*செய்முறை :*
•• வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
•• பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
•• குக்காரை அடுப்பில் வைத்து சூடானதும் சீரகம், மிளகு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், கேரட்டை போட்டு நன்கு வதக்கவும்.
•• அடுத்து அதில் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.
•• விசில் போனவுடன் மூடியை திறந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
•• சத்தான மிளகு சீரக சூப் ரெடி.
*குறிப்பு:*
இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக