மதுரை இட்லி கடை சாம்பார்
இந்த சாம்பார் மதுரையில் நான் ஒரு ஒட்டலில் சாப்பிட்டது
இட்லியுடன் இணைந்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
அந்த ஒட்டல் சமையல்காரரிடம் செய்முறையயை தெரிந்து கொண்டேன். இதோ உங்களுக்காக
இந்த சாம்பார் நெய் பொங்களுடன் சாப்பிட தேவாமிர்தம் போல் இருக்கும்.
செய்து ஒரு புடி படித்துவிட்டு சொல்லுங்கள் இதன் சுவையை !!!
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் 15 ( அம்மிகல்லில் நசுக்கியது)
தக்காளி 4 ( விழுதாக மையாக அரைத்தது)
பச்சை மிளகாய் 4
கடலை மாவு 2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 2 கொத்து
கொத்தமல்லி விதை 3 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
வரமிளகாய் 4
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
துவரம் பருப்பு 1/4 கப்
கொத்தமல்லி இலைகள் 1/2 கைப்பிடி
கடுகு 1 தேக்கரண்டி
உளுந்து பருப்பு 1 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
பூண்டு பற்கள் 3 ( அம்மிகல்லில் நசுக்கியது)
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
பசு நெய் 1 மேஜைக்கரண்டி
செய்முறை
1. பிரஷர் குக்கரில் கழுவிய பருப்பை சேர்த்துகோங்க , நன்றாக 10 நிமிடங்கள் வரை விட்டுகோங்க நன்றாக குழைய குழைய வேக வைத்துகொள்ள வேண்டும்.
2. வடச்சட்டியில் எண்ணெய் விடாமல் கொத்தமல்லி விதை, சீரகம், வெந்தயம் மற்றும் வரமிளகாய் சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக மணம் வீசும் வரை அடுப்பை சிறுதீயில் வைத்து வறுத்து கொள்ள வேண்டும்.
3. இப்பொழுது நன்றாக ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
4. இப்பொழுது கடலை மாவை தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டிகள் விழாமல் கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
5. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், அதில் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. பிறகு அதில் அம்மிகல்லில் நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும். அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
7. அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
8. அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
9. பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்துகோங்க நன்றாக இரண்டு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். அதில் கடலை மாவு கலவையை சேர்த்துகோங்க மற்றும் அதில் 1 கப் தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கிளறி சிறிது சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
10. இந்த கலவையை பிரஷர் குக்கருடன் உள்ள பருப்பு கலவையில் சேர்த்துகோங்க அதாவது பிரஷர் குக்கரை அடுப்புல வைத்து பிரஷர் குக்கரின் மூடியை மூடி 3-4 விசில் வரை விட்டுகோங்க.
11. அதன் பின்னர் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். இறக்கும் முன் பசுநெய்யை 1 மேஜைக்கரண்டி விடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக