கிரீன் டீயின் நன்மைகள் மற்றும் செய்முறை விளக்கம்.
கிரீன் டீயின் நன்மைகள்:
1. மன அழுத்தம் மற்றும் கவலையைப் போக்குகிறது கிரீன் டீயில் இருக்கும் அமினோ அமிலங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தினை குறைக்கும் நிவாரணியாக உதவுகிறது.
2. வைரஸ் கிருமி பரவுவதிலிருந்து தடுக்கிறது. ஜப்பனீஸ் விஞ்ஞானிகள் கிரீன் டீயிலுள்ள இஜிசிஜி ஆரோக்கியமான செல்களை ஊக்குவிக்கிறது, மேலும் இது ஹெச்.ஐ.வி வைரஸை தடுக்கவும் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3. பார்கின்சன் நோய் ஆபத்தைக் குறைக்கிறது.
கிரீன் டீ, பார்கின்சன் நோய் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து மூளை செல்களை பாதுகாக்க உதவுகிறது.
4. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.
கிரீன் டீ உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய, ஆன்ஜியோடென்ஷனை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை சமமாக வைத்திருக்க உதவுகிறது.
5. நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது:
கிரீன் டீ உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாலிபினால்களில் மற்றும் ஃபிளாவனாய்டுகளினால் ஒரு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. இது நோய்களுக்கு எதிராக நல்ல திறனை உருவாக்குகிறது.
6. நோய் எதிர்ப்பு ஊக்கியாக உள்ளது:
இதில் வைட்டமின் சி இருப்பதன் மூலம் குளிர் மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக வைத்திருகிறது. மேலும் உங்கள் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
7. உணவு நச்சு தன்மையின் ஆபத்தைக் குறைக்கிறது:
கிரீன் டீ உணவில் இருக்கும் நச்சு தன்மையின்ஆபத்தை குறைக்கும் திறன் பெற்றுள்ளது; மேலும் அது சிறுநீரக செயலிழப்பு மற்றும் மற்ற சிறுநீரக நோய்களுக்கான வாய்ப்புகளை பெருமளவில் குறைக்க உதவுகிறது.
8. எலும்பின் அடர்த்தி பராமரிக்கப்படுகிறது:
நீங்கள் ஒவ்வொரு நாளும் கிரீன் டீ குடித்தால், இது ஆரோக்கியமான ஃப்ளோரைடு அழிவிலிருந்து காப்பாற்றி உங்கள் எலும்புகளை அடர்த்தியாக வைத்திருக்க உதவுகிறது.
9. உடல் பருமன் மற்றும் உடல் கொழுப்பின் அளவை குறைக்கிறது:
கிரீன் டீ கொழுப்பு செல்களிலுள்ள குளுக்கோஸ் இயக்கத்தை கட்டுபடுத்தி உடல் பருமனை தடுக்கிறது. மேலும் கிரீன் டீ கொழுப்பின் அளவுகளை அதிக அளவில் குறைக்க உதவுகிறது மற்றும் நம் உடம்பிற்கு தேவையான நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
10.தோலைப் பளபளப்பாக்குகிறது:
கிரீன் டீ உங்கள் தோலின் தோற்றத்தை இளமையானதாக வைத்திருக்க உதவுகிறது.
11. புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது:
கிரீன் டீ உயர் ஆக்ஸிஜனேற்ற அளவைக் கொண்டுள்ளதால் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தைக் குறைகிறது. பசும் தேநீரில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்டுகள் புற்றுநோயை தடுக்கிற்து என நம்பப்படுகிறது, இது செல் சேதத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது.
12. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
கிரீன் டீ இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைத்து இதய நோய்களுக்கு விடுதலையளிக்கிறது.
13. ஒல்லியாவதற்கு தீர்வாகிறது.
கிரீன் டீ எடை இழக்க முயற்சி செய்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒல்லியாக வேண்டி நீங்கள் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் அது அதிக பலனைக் கொடுக்காது, இத்துடன் கிரீன் டீ சேர்க்கும் போது எளிதில் நீங்கள் எடையை குறைக்க முடியும்.
கிரீன் டீயில் பல பயனுள்ள பண்புகள் உள்ளது. இதில் பல்வேறு நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது அதிக அளவிலான கார்போஹைட்ரேட், மற்றும் கொழுப்பு அமிலங்களை போக்குகிறது. இந்த க்ரீன் டீயில் ஸ்டெரொல்ஸ், பாலிஃபினால்கள், கரோட்டினாய்டுகள், டோக்கோஃபேரல்கள் போன்றவை இதில் கலந்துள்ளது.
சிறந்த கிரீன் டீயானது பல விலையுயர்ந்தவற்றில் ஒன்றாக உள்ளது. உதாரணமாக டிராகன் வெல் அல்லது லங் சிங்க். இது விலையுயர்ந்த கிரீன் டீக்களில் ஒன்றாகும். இதன் நிறம் பிரகாசமான பச்சை நிறமாகவும், குறைந்த அளவிலும் மற்றும் இதன் விலை மிக அதிகமாகவும் இருக்கிறது.
இவைகளில் பல வகைகள் உள்ளன உதாரணமாக.
மாச்சா, கியோகுரோ, ஜென்மைச்சா, ஹொஜிச்சா இவை போன்றவைகள். இவைகள் இதன் சுவை, நிறம் , நறுமணம் போன்றவைகளைப் பொருத்து இதன். விலை வேறுபடுகிறது.
கிரீன் டீ தயார் செய்யும் முறை:
நம் வீட்டில் செய்யும் சராசரி கருப்பு தேநீரை விட வித்தியாசமானது இந்த கிரீன் டீ.
குறிப்பு:
க்ரீன் டீ தயாரிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை, டீ இலைகள் 90° நீரில் மூழ்கியிருக்கிறது என்றால் அவை கசப்பாக மாறும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் சூடாக (80-85 டிகிரி செல்சியஸ்) அல்லது கொதிக்கும் நீரில் தூளை சேர்க்கவும். சிறந்த வெப்பநிலையில் டீயை மிகவும் சிறப்பாக செய்ய முடியும்.
தேவையானப் பொருட்கள்:
1. கிரீன் டீத்தூள் (அல்லது) கிரீன் டீ இலைகள் - 1½ டீஸ்பூன்,
2. தண்ணீர் – 1 கப்,
3. சர்க்கரை – 1 டீஸ்பூன்.
( நீங்கள் டயட்டில் இருந்தால் சர்க்கரைக்கு மாற்றாக தேன் 1 டீஸ்பூன் பயன்படுத்தலாம் )
* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து சுடுபடுத்திக் கொள்ளவும். பின் கிரீன் டீத்தூளை அதில் சேர்க்க வேண்டும்.
( இது கசப்பாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது சுமார் 85°, வெப்பனிலையில் தான் இதை சூடுபடுத்த வேண்டும்)
* இது நன்கு கொதினிலைக்கு வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இதை சிறிது நேரம் ஆற விடவும்.
* இது ஊறுவதற்கு சுமார் 3 நிமிடங்கள் ஆகும். ஆனால் நீங்கள் இதன் சுவை போதுமானதாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க 1 ½ நிமிடங்கள் கழித்து ஒரு வாய் குடித்து பார்க்கலாம்.
* 3 நிமிடங்களுக்கு பிறகு, இதன் நிறம் பழுப்பாக மாறிவிடும். இப்பொழுது ஒரு வடிகட்டி பயன்படுத்தி தேயிலை தூளை தனியே வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* தேநீரில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பரிமாறவும்.
( நீங்கள் மேலும் சுவையைக் கூட்ட ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை சேர்க்கலாம்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக