மதுரை மட்டன் குழம்பு
*மட்டன் குழம்பு என்றால், மதுரை மட்டன் குழப்பு தான் அனைவரின் முதல் தேர்வும்.*
*காரம், சுவை, வாசனை அனைவரையும் சுண்டி ஈர்க்கும்.*
இந்த மட்டன் குழம்பை எப்படி வைப்பது என்று பார்ப்போம்.
*தேவையானவை:*
எலும்புடன் ஆட்டுக்கறி -1/2 kg
தக்காளி பெரியது -2
சின்ன வெங்காயம் _50 கிராம்
கசகசா _2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -2 டேபிள்ஸ்பூன்
குழம்பு மசாலா பொடி -2 குழிக்கரண்டி
கருவேப்பிலை -சிறிது
கொத்தமல்லி -சிறிது
தேங்காய் -1/2 மூடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள்ஸ்பூன்
*செய்முறை:*
கசகசா ,சீரகம் இரண்டையும் அம்மியில் அரைக்கவும்.
அம்மியில அரைத்தால் குழம்பு சுவையாக இருக்கும்.
நன்றாக அரைத்ததும் 5 சின்ன வெங்காயத்தை அதனுடன் தட்டி எடுக்கவும்.
கறியை நன்றாகக் கழுவி அரைத்த மசாலா ,தக்காளி , இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு போட்டு குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும்.
கறி நன்றாக வெந்ததும் வாணலியில் நல்லஎண்ணை ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை ,வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும் .
அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்ற வேண்டும் .அதிகம் கொதிக்க விடக்கூடாது .
எண்ணெய் தெளிந்து மேலே மிதந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
*கமகமன்னு மதுரை மட்டன் குழம்பு ரெடி!*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக