வியாழன், 29 ஜூன், 2017

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி



பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

*தேவையான பொருட்கள் :*

பெரிய பாகற்காய் – 250 கிராம்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
நசுக்கிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு – 5 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

*செய்முறை :*

* பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விடவும்.

* வெட்டிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

* பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது).

* வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும்.

* கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

* எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக