இதயத்திற்கும் புத்துணர்வு ஊட்டும் பொன்னாங்கன்னிக் கீரை அடை!..
தேவையானவை
பொன்னாங்கன்னி கீரை -1 கட்டு
அரிசி - 1 கப்
இஞ்சி - 1/2 அங்குலம்
பூண்டு - 1 ( விருப்பமானால்)
சோம்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பெருங்காயம் - புளியங்கொட்டை அளவு
துவரம் பருப்பு - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 4
கடலை பருப்பு - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
பொன்னாங்கன்னி கீரையை ஆய்ந்து கொள்ளவும். வெங்காயம், பச்சை ளிமகாய், தோல் நீக்கிய இஞ்சி, உரித்த பூண்டு பொடியாக நறுக்கவும். அரிசையும், கடலைபருப்பையும் தனித்தனியாக ஊற விடவும். கடலைப் பருப்போடு, துவரம்பருப்பையும் சேர்த்து ஊற விடவும்.
அரிசியைக் கழுவி கிரைண்டரில் போட்டு உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். பப்பை கரரகப்பாக அரைத்தச் சேர்த்து அதனோடு நறுக்கிய கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கிளறவும்.
தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் ஒரு விரல் கனத்துக்கு மாவை வட்டமாகத் தட்டி மேலும் சிறிது எண்ணெய் விட்டு இரண்டு புறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
சுடச்சுட அடையுடன் தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, ஸ்வீட் சட்னி, வெண்ணெய், பொடித்த வெல்லம், அவியல், புதினா சட்னியோடு பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக