வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஒப்பிட்டு



ஒப்பிட்டு

என்னென்ன தேவை?

பூரணத்திற்கு...

பிஸ்தா, முந்திரி, ஊறவைத்து தோலுரித்த பாதாம் - தலா 10,
உலர்ந்த அத்திப்பழம், காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் - தலா 4,
தேங்காய் கொப்பரை - 1 கப்  (பொடித்தது),
பொடித்த வெல்லம் - 1 கப்,
துருவிய கோவா - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

மேல் மாவிற்கு...

மைதா - 1½ கப்,
கேசரி கலர் பவுடர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர்,
உப்பு - தலா 1 சிட்டிகை,
நெய் - சிறிது,
நல்லெண்ணெய் - 1 கப் அல்லது தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை, அத்திப்பழம் அனைத்தையும் 10 நிமிடம் ஊறவைத்து கொப்பரையுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் வெல்லத்தைச் சேர்த்து பாகு காய்ச்சி, அரைத்த நட்ஸ் கலவை, ஏலக்காய்த்தூள், கோவா சேர்த்து கலந்து பூரணமாக வந்ததும் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, கேசரி பவுடர், சிறிது நல்லெண்ணெய், உப்பு கலந்து, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிைசந்து, மேலே சிறிது எண்ணெய் விட்டு 15 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பின் சிறிய சப்பாத்திகளாக இட்டு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி கை விரலால் போளியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக