வெள்ளி, 29 செப்டம்பர், 2017

30 வகை நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபி---30 நாள் 30 வகை சமையல்,

30 வகை நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபி---30 நாள் 30 வகை சமையல்,


நவராத்திரி கொண்டாடப்படும் நாட்களில் இல்லத்தில் உற்சாகம், மகிழ்ச்சி பொங்கி வழிவது கண்கூடான காட்சி! நவராத்திரி சமயத்தில் செய்து மகிழ சுண்டல் மற்றும் பிற நிவேதனங்கள்... கேரட் பாசந்தி, ஃப்ரூட் கேசரி, அப்பம் போன்ற இதர ஸ்பெஷல் ரெசிபிகளைவழங்குகிறார் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
''நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, தேவியரை மெய்சிலிர்க்க வழிபட்டு, விதம்விதமாக உணவுகள் தயாரித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் மனநிறைவு வார்த்தைகளில் அடங்காது. தேவியரின் அருளால் உங்கள் இல்லத்தில் அன்பும், ஐஸ்வர்யமும் நிறைந்திருக்கட்டும்'' என்று வாழ்த்தும் தீபாவின் ரெசிபிகளை, மனதை மயக்கும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
சம்பா அவல்
தேவையானவை: அவல் -  ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை 5 நிமிடம் நீரில் ஊறவிடவும். வாணலியில் நெய் விட்டு, முந்திரிப் பருப்பை வறுக்கவும். அதே வாணலியில் நெய்யுடன் எண்ணெய் சிறிதளவு கலந்து கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... ஊற வைத்த அவல், பொடித்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால்... சம்பா அவல் ரெடி!
குறிப்பு: சம்பா அவல் அல்லது வெண் பொங்கலை நவராத்திரி முதல் நாள் நிவேதனமாக செய்யலாம்
ஆப்பிள்  பன்னீர் பாயசம்
தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, காய்ச்சி ஆற வைத்த பால் - கால் லிட்டர், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பன்னீர் - சில துளிகள், முந்திரி, திராட்சை - தலா 5, நெய் - சிறிதளவு.
செய்முறை: நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஆப்பிளை தோல் சீவி துண்டுகள் செய்து, சிறிதளவு காய்ச்சிய பால் விட்டு நைஸாக அரைக்கவும். மீதமுள்ள பாலை மிதமான தீயில் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்து, கொதிவிட்டு இறக்கி. பன்னீர் துளிகள், முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும்.
முக்கூட்டு வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், மிளகு, சீரகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10, நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடிய விட்டு... மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைக்கவும். இதனுடன் நெய் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
தாளித்த தயிர் சாதம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, காய்ச்சி ஆற வைத்த பால், தயிர் - தலா அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை நன்கு குழைய வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் தாளித்து சாதத்துடன் கலந்து... பால், தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்தால்... தாளித்த தயிர் சாதம் ரெடி!
குறிப்பு: நவராத்திரி நான்காவது நாள் ஜெயதுர்க்கைக்கு தயிர் சாத நிவேதனம் சிறந்தது.
நவராத்திரி அமிர்தம்
தேவையானவை: ஆப்பிள், மாம்பழம், அத்திப்பழம், சப்போட்டா, வாழைப்பழம் - தலா ஒன்று, முந்திரி, திராட்சை, பாதாம், பேரீச்சை - தலா பத்து, நெய், தேன் - தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிள், மாம்பழம், சப்போட்டா, அத்திப்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கவும். வாழைப்பழத்தை தோலுரித்து துண்டு களாக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றுடன் துண்டுகளாக்கிய பேரீச்சை,துண்டுகளாக்கிய பழ வகைகள், தேன் சேர்த்துக் கலக்கி நிவேதனம் செய்யவும்.
 ஃப்ரூட்ஸ் கேசரி
தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - அரை கப், கேசரி கலர் பொடி - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் - அரை கப், முந்திரி, திராட்சை - அலங்கரிக்க தேவையான அளவு.
செய்முறை: ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை வறுத்து எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதி வந்த பின் ரவையை சேர்த்துக் கிளறவும். முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை, நெய், பழ வகைகள் சேர்த்துக் கிளறி இறக்கவும். முந்திரி, திராட்சை அலங்கரித்து பரிமாறவும்.
இலங்கை அல்வா
தேவையானவை: தேங்காய்ப் பால், கடலை மாவு - தலா ஒரு கப், மைதா மாவு - அரை கப், சர்க்கரை, நெய் - தலா 2 கப்.
செய்முறை: தேங்காய்ப் பாலுடன் கடலை மாவு, மைதா மாவு, சர்க்கரை ஆகியவற்றை  சேர்த்துக் கலக்கவும். அடி கனமான பாத்திரத்தில் இந்தக் கலவையை சேர்த்து, சிறிது நெய் விட்டு, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கிளறவும். நன்கு வெந்து வரும்போது மீதியுள்ள நெய் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.
சத்து மாவு புட்டு
தேவையானவை: சத்து மாவு (நவதானியங்களை வறுத்து, அரைத்த மாவு) - ஒரு கப், தேங்காய் துருவல், சர்க்கரை - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் சத்து மாவை போட்டு... உப்பு, எண்ணெய் விட்டு பிசிறி, சிறிதளவு தண்ணீரை மாவின் மீது தெளித்து, பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கைகளால் உதிர் உதிராக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... சத்தான புட்டு  ரெடி!
குறிப்பு: இதை நவராத்திரி ஏழாம் நாள் செய்வது விசேஷம்.
 சிகிலி
தேவையானவை: கறுப்பு எள், வெல்லம் - தலா 50 கிராம்.
செய்முறை: கறுப்பு எள்ளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பின்பு களைந்து, வடிகட்டி உலர்த்தவும். நன்கு காய்ந்த பின்பு, வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வெடிக்கவிட்டு வறுக்கவும். ஆறிய பின்பு கையால் தேய்த்து தோலை நீக்கி, புடைத்து சுத்தம் செய்யவும். பிறகு மிக்ஸியில் எள்ளை போட்டு அரைக்கவும். பாதி அரைபட்டவுடன் பொடித்த வெல்லத்தை போட்டு மேலும் ஒரு சுற்று சுற்றி நன்கு ஒருசேர அரைக்கவும். பிறகு உருண்டைகளாக பிடித்து சாப்பிட லாம். அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
குறிப்பு: இரும்பு சத்து அதிகம் கொண்டது இந்த சிகிலி!
வெஜ்  சோயா சுண்டல்
தேவையானவை: சோயா பீன்ஸ் - ஒரு கப், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோயா பீன்ஸை முதல் நாள் இரவே கழுவி ஊறவிடவும். மறுநாள் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... வேக வைத்த சோயா, தேங்காய் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு கலந்து கிளறி பரிமாறவும்.
ரங்கோலி சுண்டல்
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா - தலா ஒரு சிறிய கப், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
பொடி செய்வதற்கு: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: பொடி செய்ய கொடுத்துள்ளவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். கடலை வகைகளை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறு நாள் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... வேக வைத்த கடலை வகைகள், மிக்ஸியில் அரைத்து வைத்த  பொடி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... கலர்ஃபுல்லான ரங்கோலி சுண்டல் ரெடி!
 முத்து சுண்டல்
தேவையானவை: ஜவ்வரிசி -  ஒரு கப், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை வறுத்து இரண்டு பங்கு வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். ஒரு மணி நேரம் கழித்து நீரை வடியவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, அதனுடன் ஊற வைத்த ஜவ்வரிசி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... முத்து சுண்டல் தயார். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.
கேரட் பாசந்தி
தேவையானவை: பால் - 4 கப், கேரட் - ஒன்று, பாதாம், முந்திரி - தலா 4, சர்க்கரை - ஒரு கப். 
செய்முறை: கேரட்டை துருவவும். பாதாம், முந்திரியை சிறிதளவு பாலில் ஊற வைத்து கேரட் துருவல் சேர்த்து அரைக்கவும். பாலை அடி கனமான பாத்திரத்தில் விட்டு காய்ச்சவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை சுண்ட விடவும். ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சர்க்கரை, அரைத்த கேரட் விழுது சேர்த்து மீண்டும் நன்கு சுருள கிளறி இறக்கினால்.... கேரட் பாசந்தி தயார்!
வேர்க்கடலை  ஃப்ரூட் சுண்டல்
தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், ஆப்பிள், மாங்காய் - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை வேக வைக்கவும். ஆப்பிள், மாங்காயை கழுவி துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேக வைத்த வேர்க்கடலை, மாங்காய் துருவல், ஆப்பிள் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்... ஃப்ரூட் சுண்டல் தயார்.
ஸ்வீட் கார்ன் சுண்டல்
தேவையானவை: ஸ்வீட் கார்ன் - ஒன்று, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை: ஸ்வீட் கார்னை குக்கரில் வேகவிடவும். அதன் முத்துக்களை உதிர்த்து... அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கி, சூடாக பரிமாறவும்.
மிகவும் ஆரோக்கியமான சுண்டல் இது!
முளைப்பயறு சுண்டல்
தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பயறை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் வடிகட்டி ஒரு துணியில் போட்டு மூட்டை கட்டி வைத்து, முளைகட்ட விடவும். அதற்கு மறுநாள் நன்கு முளைத்துவிடும். முளைத்த பயறை குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறிய பின் வடிய வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து... வேக வைத்த பயறு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கறுப்பு உளுந்து சுண்டல்
தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 10 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறுப்பு உளுந்தை நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, குக்கரில் வைத்து  ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பின்பு வடியவிடவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து... வெந்த உளுந்து, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்ற சுண்டல் இது!
கோல்டன் ரிங்ஸ்
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு , வெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, மிளகுத்தூள், சீரகம், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். பிசைந்த மாவில் இருந்து சிறிய கோலி உருண்டை அளவு எடுத்து ஒரு இன்ச் அளவு பென்சில் போல நீளமாக தேய்த்து, அதன் இரு முனைகளையும் ஒன்று சேர்த்து வளையங்கள் போல் செய்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, செய்த வளையங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அப்பம்
தேவையானவை: வெல்லம் - ஒன்றரை கப், கோதுமை மாவு - 2 கப், அரிசி மாவு - கால் கப்,  வாழைப்பழம் - ஒன்று (பிசைந்து கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, வாழைப்பழத்தை பிசைந்த விழுது, ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, கரைத்த மாவை சிறிய கரண்டியால் எடுத்து அப்பங்களாக ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
வேர்க்கடலை  வெல்ல லட்டு
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது), பொடித்த வெல்லம்  - தலா ஒரு கப்.
செய்முறை: தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து மேலும் நைஸாக ஒருசேர அரைத்து, லட்டுகளாக விருப்பமான அளவுகளில் பிடிக்கவும்.
ஹனி பால்ஸ்
தேவையானவை: பாதாம், முந்திரி, வேர்க்கடலை - தலா 10, பேரீச்சை - 4, தேன் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாதாம், முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறவிடவும். இவற்றுடன் கொட்டை நீக்கிய பேரீச்சை துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பொடியுடன் தேன் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். நவராத்திரி சமயத்தில் வரும் குட்டீஸ்களுக்கு கொடுக்க ஏற்ற ஸ்வீட் இது!
 மோதகம்
தேவையானவை: தேங்காய் துருவல், வெல்லம் - தலா ஒரு கப், கோதுமை மாவு - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: தேங்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். அரைத்த தேங்காய் விழுதுடன் ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து வாணலியில் பூரணமாக கிளறவும். இதை சிறிய உருண்டைகளாக செய்யவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து... கரைத்து வைத்த கோதுமை மாவில் பூரண உருண்டைகளைத் தோய்த்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.
வீட் பிரட்டல்
தேவையானவை: கோதுமை மாவு, சர்க்கரை - தலா ஒரு கப்.
செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். எளிதில் செய்யக்கூடிய இது, சுவையாக இருக்கும்.
குறிப்பு: நவராத்திரியின் சமயத்தில், இந்த வீட் பிரட்டல் செய்து வைத்துக் கொண்டால்.... நிவேதனங்கள் தீர்ந்த பின்பு வருபவர்களுக்கு இதை பாக்கெட் செய்து தரலாம்.
கல்கண்டு பாத்
தேவையானவை: பச்சரிசி, பால், டைமண்ட் கல்கண்டு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 5 டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இதனுடன் இரண்டு கப் நீர் விட்டு குக்கரில் வைத்து, நான்கு விசில் வந்ததும் இறக்கவும். கல்கண்டை மிக்ஸியில் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில்... வெந்த சாதம், பால், கல்கண்டு பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க வைத்து இறக்கி... வறுத்த முந்திரி, திராட்சையை மேலே அலங்கரித்து பரிமாறவும்.
ஸ்வீட் மிக்ஸர்
தேவையானவை: அவல் - ஒரு கப், வெல்லம் - 2 கப், தேங்காய் துருவல், வேர்க்கடலை - தலா அரை கப், எள், நெய் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். எள், அவல், தேங்காய் துருவல், வேர்க்கடலை ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியே வறுக்கவும். வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்து கொதி விட்டு, இறுகி வரும்போது இறக்கி... அவல், வேர்க்கடலை, தேங்காய் துருவல், எள், நெய், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும்.
இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
அவல் லட்டு
தேவையானவை: வெள்ளை அவல், சர்க்கரை - தலா ஒரு கப், முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிட்டிகை, நெய் - தேவையான அளவு.
செய்முறை: அவலை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடிக்கவும். சிறிதளவு சர்க்கரை பொடியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, பொடித்த அவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யை காய்ச்சி இதில் ஊற்றி உருண்டைகளாக பிடித்து, தனியாக எடுத்து வைத்த சர்க்கரை தூளில் புரட்டி எடுத்தால்... அவல் லட்டு தயார்!
 ஹெல்தி ரோல்ஸ்
தேவையானவை: பாதாம், முந்திரி, பேரீச்சை - தலா 10, தேங்காய் துருவல், நெய் - தேவையான அளவு.
செய்முறை: நெய்யில் பாதாம், முந்திரியை வறுக்கவும். இதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சை சேர்த்து அரைத்து வைக்கவும். தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் அரைத்து வைத்த பேரீச்சை விழுது, உருக்கிய நெய் சேர்த்துப் பிசைந்து ரோல்களாக செய்யவும்.
கடலைப்பருப்பு சுண்டல்
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... வேக வைத்த பருப்பு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
 கோசுமல்லி
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட் துருவல், வெள்ளரி துருவல் - தலா கால் கப், தேங்காய் துருவல் - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு,  கடுகு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு. 
செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் வடித்து எடுக்கவும். இதனுடன் கேரட் துருவல், வெள்ளரி துருவல், தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
பானகம்
தேவையானவை: தண்ணீர் - ஒரு கப், வெல்லம் - 2 டீஸ்பூன், சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து நிவேதனம் செய்யவும்.
குறிப்பு: எந்த நிவேதனமும் கைவசம் இல்லாத சூழ்நிலையில், பானகம் கை கொடுக்கும்!

தினம் 4 கப் காபி: உடலில் ஏற்படும் மாற்றம் இதுதான



தினம் 4 கப் காபி: உடலில் ஏற்படும் மாற்றம் இதுதான

#Cancer #Heart Attack
ஒவ்வொரு நாளும் 4 கப் காபி குடிப்பவர்களுக்கு இறப்பின் அபாயம் 64% குறையும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தினசரி எடுத்து கொள்ளும் 2 கப் காபி அவர்கள் இறப்பின் அபாயத்தை 30% வரை குறைப்பதாக கூறுகிறது. ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் இளைஞர்களுக்கு மட்டும் ஏற்றதாக இருக்காது என்று கூறுகின்றது.
தினம் 4 கப் காபி குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?
காஃபின் இல்லாமல் காபி குடிப்பவர்களுக்கு இதயநோய், ஸ்ட்ரோக், செரிமானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் 7-12% குறையும்.
நம் உடலில் உள்ள ஆற்றலை அதிகரித்து, டோபமைன் போன்ற நரம்பியல் கடத்திகளை ஊக்குவித்து அதிக நியூரோன்களை எரிக்க உதவுகிறது.
அறிவாற்றல் மற்றும் மூளையின் செயல் திறனை மேம்படுத்தி, கொழுப்பை எரிபொருளாக மாற்ற உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் நிலையை மேம்படுத்துகிறது.
காபியின் ஒவ்வொரு கப்பிலும் உள்ள ரிபோபிளவின், பேன்தொதெனிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் நியாசின் போன்றவை டைப் 2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
ஒரு நாளில் 4 கப்புகளுக்கு மேல் பருகும் போது மனச்சோர்வு நீங்கி, கல்லீரலின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
பலவகை புற்றுநோய், இதயநோய் மற்றும் ஸ்ட்ரோக் நோய் வராமல் தடுக்கிறது.

7 நாள்... 7 காபி.. ஏராளமான பலன்கள்..! #HealthyCoffee...


7 நாள்... 7 காபி.. ஏராளமான பலன்கள்..! #HealthyCoffee... உலக காப்பி தினம் செப்டம்பர் 29.

காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றையப் பொழுது ஆனந்தமாகப் புலர்ந்ததாக நம்புகிறவர்கள் பலர். கும்பகோணம் டிகிரியில் தொடங்கி, எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி பைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை. காபி கொடுத்து விருந்தினரை உபசரிப்பதில் தொடங்குவது, நம் விருந்தோம்பல் பண்பாடு. உற்சாகமூட்டும் பானம் என்பதையும் தாண்டி, இதற்கெனவே சில மகத்துவங்கள் உண்டு. உடலில் எனர்ஜி லெவலை அதிகரிக்கும்; கொழுப்பைக் குறைக்கும்; அல்சைமர், டிமென்ஷியா பிரச்னைகளில் இருந்து காக்கும்... என பெரிய பட்டியலே போடுகிறார்கள் மருத்துவர்கள். வழக்கமான காபியைத் தாண்டி சில ஆரோக்கியமான வகைகளையும் அருந்தலாம்; அவற்றையும் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். ஏழு நாள்... ஏழு காபி... என வாரம் முழுக்க அருந்த அருமையான வகைகள்... அவற்றைச் செய்யும் முறைகள்... பலன்கள்!


கருப்பட்டி காபி
தேவையானவை: கருப்பட்டி - 1/4 கப், காபித்தூள் - 2 டீஸ்பூன்.
செய்முறை: முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்ஷன் இறக்கவும். அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.
பலன்கள்: சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.


தாமரைப்பூ காபி

தேவையானவை: வெண்தாமரை அல்லது செந்தாமரை - 1, மிளகு - 5, கிராம்பு -2, ஏலக்காய் - 2, பால் - 1/4 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.
செய்முறை: இரண்டு டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப்பூவைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதி வரும்போது கிராம்புப் பொடி, மிளகு, ஏலக்காய் சேர்க்கவும். முக்கால் டம்ளர் அளவுக்கு வந்ததும் அதை வடிகட்டவும். அதில் பால், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தவும்.
பலன்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோஅமிலங்கள், பாலிஃபினால், கிளைக்கோசைட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இது, புற்றுநோய் வராமல் காக்க்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சீராக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் ஏற்றது.


செம்பருத்திப்பூ காபி
தேவையானவை: செம்பருத்திப் பூ - 1, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, மிளகு - 5, பால் - 1/2 கப், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.
செய்முறை: செம்பருத்திப்பூவின் காம்பு, மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிடவும். இதனுடன், ஏலக்காய், கிராம்பு, மிளகைப் பொடித்துச் சேர்க்கவும். கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: செம்பருத்திப்பூவில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பலமாக்கும். சருமத்தைப் பாதுகாக்கும்.



சுக்கு காபி
தேவையானவை: சுக்கு - 1 அங்குலத்துண்டு, ஏலக்காய் - 2, பனஞ்சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - 1/2 கப்.
செய்முறை: சுக்கு, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். இதை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப் பருகலாம். மாலையில் பருக ஏற்ற பானம்.
பலன்கள்: கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும். சளி, கபம் ஆகியவற்றை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.


பேரீச்சம் விதை காபி
தேவையானவை: பேரீச்சை விதைப்பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.
செய்முறை: பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அதை வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒரு முறை பருகிவரலாம்.
பலன்கள்: பேரீச்சம் விதையில் தாமிரம், செலீனியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும். இது ரத்த உற்பத்திக்கும் தாது உற்பத்திக்கும் உதவக்கூடியது. சருமத்தைப் பாதுகாக்கும்; நினைவாற்றலை மேம்படுத்தும்.


முருங்கைப்பூ காபி
தேவையானவை: முருங்கைப்பூப் பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டுப் பொடி - 1 டீஸ்பூன்.
செய்முறை: முருங்கைப் பூவைச் சுத்தம்செய்து உலர்த்திப் பொடி செய்துகொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் இந்தப் பொடியையும் பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கி அருந்தவும்.
பலன்கள்: முருங்கையில் வைட்டமின் ஏ, பி6, பி9, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும், உடலுக்கு வலுவைத் தரும். எலும்புகளை வலுவாக்கும். உடல்வலியைப் போக்கும். ஆண்மையைப் பெருக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும்.


ஏலக்காய் காபி
தேவையானவை: காபித்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன், பால் - 1 1/2 கப், தண்ணீர் - 1/2 கப், ஏலக்காய் - 4.
செய்முறை: ஒரு சிறு கிண்ணத்தில் காபித்தூளையும் சர்க்கரையையும் போடவும். அதில் 1/4 டீஸ்பூனுக்கும் குறைவான நீரைச் சேர்த்து, ஒரு கரண்டியால் பேஸ்டாக ஆகும் வரை நுரை பொங்க அடிக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலையும் தண்ணீரையும் சேர்க்கவும். அதில், ஏலக்காயை விதை நீக்கிப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய் வாசனை போகாமல் இருக்க, அடுப்பை சிம்மிலேயே வைத்திருக்கவும். இரண்டு கப்களில் காபி -சர்க்கரைக் கலவையை சமமாக ஊற்றவும். அவற்றில், பால்-ஏலக்காய் கலவையைச் சேர்த்து, மேலே சிறிது காபி பொடி தூவிப் பருகவும்.
பலன்கள்: ஏலக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன. ஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. அசிடிட்டி, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு நிவாரணம் தரும். சிறுநீரகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை விரட்டும் நச்சு நீக்கியாகச் செயல்படும். இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

சனி, 23 செப்டம்பர், 2017

உடலுக்கு நன்மை தரும் பானங்கள்..!



உடலுக்கு நன்மை தரும் பானங்கள்..!

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்:

துளசி இலை டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ: கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை டீ: முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு: டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கோவில் புளியோதரை



கோவில் புளியோதரை

தேவையான பொருட்கள்

புளி          ஒரு பெரிய  எலுமிச்சம்பழம் அளவு
மஞ்சள் தூள்          1 தேக்கரண்டி,
உப்பு          தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க
காய்ந்த மிளகாய்          7,
கடலை பருப்பு          2 தேக்கரண்டி,
தனியா          2 தேக்கரண்டி,
வெந்தயம்          1/2 தேக்கரண்டி,
எள்          1 மேசைக்கரண்டி.
தாளிக்க
கடுகு          1 தேக்கரண்டி,
கடலை பருப்பு          1 தேக்கரண்டி,
வறுத்து தோல்
நீக்கிய வேர்க்கடலை         கைப்பிடி,
பெருங்காயம்          சிறிது,
காய்ந்த மிளகாய்          7,
கறிவேப்பிலை          சிறிது,
முந்திரிப்பருப்பு          10
எண்ணெய்          4 மேசைக்கரண்டி.
சாதம் கலக்க
சாதம்          4 கப்,
நல்லெண்ணெய்          4 ஸ்பூன்.

செய்முறை

புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து நைசாக பொடித்து வைக்கவும் (எள்ளை கடாயில் போட்டு படபடவென பொரிந்ததும் எடுக்கவும்). மிளகாயை மூன்று பாகங்களாக கிள்ளி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வேர்க்கடலை சேர்த்து பிரட்டி கறிவேப்பிலை சேர்க்கவும். கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போய், நன்கு கொதித்து கெட்டியானதும் பொடித்த பொடியில் முக்கால் பாகம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். சாதத்தை உதிர் உதிராக வடித்து நல்லெண்ணெய் கலந்து ஆற வைக்கவும். நன்கு ஆறியபின், புளிக் காய்ச்சல், மீதியுள்ள பொடியைச் சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கலந்து பரிமாறவும்.     

பாகற்காய் பொரியல்



பாகற்காய் பொரியல்

பாகற்காய் - 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி + பூண்டு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 2 சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு


பாகற்காயை மெல்லிய வட்டவில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் வில்லைகளை எண்ணெய்யில் போட்டு நிறம் மாறும் வரை பொரித்து எடுக்கவும். பொரித்த பாகற்காயை டிஸு பேப்பரால் ஒற்றி எண்ணெயை எடுக்கவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.


இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் எல்லா வகை பொடிகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


வதக்கியவற்றுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி வெல்லம், உப்பு சேர்த்து மூடி போட்டுக் கொதிக்க விடவும்.


கலவை கறிபதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.


சுவையான கசப்பில்லாத பாகற்காய் பொரியல் ரெடி.

புதினா புலாவ்



புதினா புலாவ்

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 1 கப்,
பெரிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 3,
புதினா இலை - 1/2 கப்,
இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு - 4 பல், பட்டை,
கிராம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் + எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு-தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியைக் களைந்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். பச்சைமிளகாய், புதினா, இஞ்சி பூண்டு இவைகளை தனியே அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். குக்கரில் நெய் + எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்புத்தூள் போட்டு பொரிய விட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி பூண்டு, புதினா, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்பு அரிசி, அளந்து வைத்துள்ள தண்ணீர், உப்பு போட்டு கலந்து 3 விசில் விட்டு இறக்கவும். சைட் டிஷ்ஷாக வெங்காய தயிர் பச்சடி அல்லது காராபூந்தி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

சூப்பரான மதிய உணவு காய்கறி எலுமிச்சம் சாதம்..


சூப்பரான மதிய உணவு காய்கறி எலுமிச்சம் சாதம்..

எலுமிச்சை சாதம் செய்யும் போது அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காய்கறி சேர்த்து எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி 2 - கப்,
எலுமிச்சம் பழம் - 2,
கேரட் - 1,
பீன்ஸ் - 10,
பட்டாணி - அரை கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 3,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
முந்திரி - 10,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை :

அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வைத்து கொள்ளவும்.

காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்த பின்னர் காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.

காய்கறிகள் வேக சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும்.

காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

சூப்பரான காய்கறி எலுமிச்சம் சாதம் ரெடி.

பூண்டு ரசம்



பூண்டு ரசம்

வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று பூண்டை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பூண்டு - 15 பல்,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
புளி - நெல்லியளவு,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
கடுகு, நெய் - தலா கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

புளி கரைத்த தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.

வாணலியில் நெய் விட்டு உருகியதும் கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.

மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

பூண்டு ரசம் ரெடி.

ஒப்பிட்டு



ஒப்பிட்டு

என்னென்ன தேவை?

பூரணத்திற்கு...

பிஸ்தா, முந்திரி, ஊறவைத்து தோலுரித்த பாதாம் - தலா 10,
உலர்ந்த அத்திப்பழம், காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் - தலா 4,
தேங்காய் கொப்பரை - 1 கப்  (பொடித்தது),
பொடித்த வெல்லம் - 1 கப்,
துருவிய கோவா - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

மேல் மாவிற்கு...

மைதா - 1½ கப்,
கேசரி கலர் பவுடர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர்,
உப்பு - தலா 1 சிட்டிகை,
நெய் - சிறிது,
நல்லெண்ணெய் - 1 கப் அல்லது தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை, அத்திப்பழம் அனைத்தையும் 10 நிமிடம் ஊறவைத்து கொப்பரையுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் வெல்லத்தைச் சேர்த்து பாகு காய்ச்சி, அரைத்த நட்ஸ் கலவை, ஏலக்காய்த்தூள், கோவா சேர்த்து கலந்து பூரணமாக வந்ததும் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, கேசரி பவுடர், சிறிது நல்லெண்ணெய், உப்பு கலந்து, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிைசந்து, மேலே சிறிது எண்ணெய் விட்டு 15 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பின் சிறிய சப்பாத்திகளாக இட்டு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி கை விரலால் போளியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.

பாதாம் மில்க் அல்வா.



பாதாம் மில்க் அல்வா.


என்னென்ன தேவை?

பாதாம் பருப்பு - 100 கிராம்
ஜீனி - 150 கிராம்
நெய் - 50 கிராம்
பால் - 100 மில்லி
பாதாம் எசன்ஸ் - சிறிதளவு
மஞ்சள் புட் கலர் - அரை ஸ்பூன்


எப்படி செய்வது?

பாலை நன்றாக கொதிக்க விட்டு, ஆற வைக்கவும். பாதாம் பருப்பை 2 மணிநேரம் ஊற விட்டு, தோல் நீக்கி பாலுடன் சேர்த்து, விழுது போல அரைக்கவும். கனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் விழுது, ஜீனி, மஞ்சள் புட் கலர் சேர்த்து கரைய விடவும். இடையில் நெய் விட்டு கிளறவும். கலவை ஒட்டாத பதத்தில் வரும்போது பாதாம் எசென்ஸ் சேர்த்து இறக்கவும். சும்மா டேஸ்ட்டு, செமையாய் இருக்கும். 

வியாழன், 21 செப்டம்பர், 2017

நவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்:-



நவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்:-

சுண்டல்
வறுவல்
துவையல்
பொறியல்
அப்பளம்
வடகம்
சூரணம்
முறுக்கு
திரட்டுப்பால்

வெண்பொங்கல்
புளியோதரை
சர்க்கரைப் பொங்கல்
கதம்ப சாதம்(காய்கறி கலந்த சாதம்)
தயிர் சாதம்
தேங்காய் சாதம்
எலுமிச்சம்பழ சாதம்
பாயசம்
அக்கார அடிசல்

இவற்றை செய்யலாம்

கடைசி நாளன்று மகா நைவேத்தியம் என்று சொல்லப்படும் வெள்ளை சாதம் படைக்க வேண்டும்.(இவற்றை வடிக்கக்கூடாது. குக்கரில் பொங்கி இறக்கலாம்.)

கடைசி நாளன்று சுத்தான்னம்(வெள்ளை சாதம்), இலை வடகம், வெண்ணெய், சுக்கு வென்னீர் இவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

மேலே சொன்னவற்றில் எதெல்லாம் முடிகிறதோ, எப்படி எல்லாம் செய்ய முடிகிறதோ, அது போல செய்து கொள்ளலாம்.

நைவேத்தியத்துக்கான யோசனைகள்:

ஞாயிறு:  கோதுமையில் செய்த அப்பம் அல்லது கடலைப் பருப்பு சுண்டல்

திங்கள்: வெல்லப் பாயசம் அல்லது வெண் பொங்கல் அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலை சுண்டல்

செவ்வாய்: சிவப்பு கொண்டைக் கடலை சுண்டல் அல்லது சோயா பீன்ஸ் சுண்டல்

புதன்: பாசிப்பயறு சுண்டல் அல்லது பச்சைப் பட்டாணி சுண்டல்]

வியாழன்: கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்

வெள்ளி: வெண் பொங்கல் அல்லது கல்கண்டு சாதம் அல்லது மொச்சை சுண்டல்

சனி: காராமணி சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல்

தினசரி அணியும் உடைகளுக்கான யோசனைகள்:

ஞாயிறு: சிவப்பு அல்லது ஆரஞ்சு

திங்கள்:  லேசான ஹாஃப் ஒயிட் நிறம்

செவ்வாய்: சிவப்பு அல்லது ஆரஞ்சு

புதன்: பச்சை

வியாழன்: மஞ்சள், பொன் நிறம்

வெள்ளி: வெள்ளி நிற ஜரிகை கலந்த உடைகள்

சனி:  நீல நிறம்

சரஸ்வதி பூஜை:

கொலு வைத்தாலும் வைக்கா விட்டாலும், மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜையை, சிறப்பாக செய்ய வேண்டும்.

முந்தைய பதிவான பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்று, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

கறுப்பு கலக்காத புதிய ரவிக்கைத் துணியை, அணிவிக்க வேண்டும்.

புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மேல், புதிய ரவிக்கைத் துணி (வெள்ளையில் பூப்போட்டதும் போடலாம்) விரித்து, அதன் மேல், வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் வைக்கலாம்.

இத்துடன் சிறிய கலசம் வைக்கலாம்.(விருப்பமிருந்தால்)

ஒரு செம்பில் நீர் அல்லது பச்சரிசி நிரப்ப வேண்டும்.

கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை உள்ளே போட வேண்டும்.

தங்கம், வெள்ளி, நாணயங்களும் போடலாம்.

இதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலையை சுற்றி வர அழகாக அமைக்க வேண்டும்.

ஒரு தேங்காயை குடுமியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டுப் பிசைந்து, தேங்காயின் மேல் முகம் மாதிரி வைக்க வேண்டும்.

இரண்டு பூண்டுப் பற்களை, கண்கள் மாதிரி வைக்கலாம்

இரண்டு மிளகு எடுத்து, பூண்டுப் பற்களின் நடுவில் வைக்கலாம்.

இந்தத் தேங்காயை, கலசத்தின் மீது(குடுமி பகுதி மேல் நோக்கி இருக்குமாறு) வைக்க வேண்டும்.

மஞ்சளின் நடுவில் மூக்கு மாதிரி செய்து, மூக்குத்தி போல சிறிய கற்கள் வைக்கலாம்.

விரும்பினால், தங்க செயின்கள் அல்லது முத்து மாலைகள் அணிவித்து, அழகு படுத்தலாம்.

பூக்கள் வைக்க வேண்டும்.

வீட்டுக் கதவுகள், டி.வி. ஃப்ரிட்ஜ், அடுப்பு, கார் எல்லாவற்றுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, பூ வைக்கலாம்.

இசை வாத்தியங்கள்(வயலின்/வீணை/கிடார் போன்றவை) இவற்றுக்கும் சந்தனம், குங்குமம், பூ வைக்கலாம்.

நைவேத்தியங்கள், பூஜைகள் முந்தைய பதிவில் சொன்னது போல(கொழுக்கட்டை தவிர) வடை, பாயசம், சுண்டல் எல்லாம் செய்து படைக்கலாம். பழங்கள் படைக்கலாம்.

மறு நாள் விஜய தசமியன்று, விளக்கேற்றி, ஏதேனும் நைவேத்தியம் செய்து விட்டு, வீட்டுப் பெரியவர்கள் அல்லது வீட்டுத் தலைவர்/தலைவியைக் கொண்டு, புத்தகங்கள், மஞ்சள் பிள்ளையார், கலசம் இவற்றை லேசாக வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும்.

விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.

அன்று இரவு, மரப்பாச்சி பொம்மைகள் அல்லது முதலில் வைத்த ஒன்றிரண்டு பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.

மறு நாளிலிருந்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்து விடலாம்.

பின் குறிப்பு:

நவராத்திரியின் போது, முடிந்த அன்று கோவில்களில் வைத்திருக்கும் கொலுவைப் போய் பார்க்கலாம்.

சாதாரணமாக எட்டாம் நாளன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் இருக்கும்.

இந்த அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தால், கட்டாயம் மறு நாள் அதே கோவிலுக்குச் சென்று, அம்மனின் சரஸ்வதி அலங்காரத்தையும் பார்த்து வர வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று கோவிலுக்குப் போகும்போது, பென்சில்கள், பேனாக்கள் போன்ற பொருட்களை பூஜையில் வைத்து, அங்கு வரும் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழலாம்.

நவராத்திரி ஸ்பெசல் பால் பாயசம்



நவராத்திரி ஸ்பெசல் பால் பாயசம்
=============
தேவையான பொருட்கள்
பால் - ஒரு லிட்டர்
அரிசி - 4 மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 15
ஏலக்காய் - 8
குங்குமப்பூ - சிறிது

செய்முறை
பாலை குக்கரில் விட்டு அதில் அரிசியை நன்கு களைந்து போட்டு ஆவி வந்ததும் வெயிட்டைப் போடவும். கேஸை சிம்மில் அரை மணி நேரம் வைக்கவும். பின்பு அணைத்து விடவும்.
குக்கரைத் திறந்து கேஸை சிறிதாக வைத்து சிறிது நேரம் விடாமல் கிளறவும். அரிசி வெந்து பால் கெட்டியாகி இளமஞ்சள் நிறமானதும், அதில் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து சேர்ந்து கொண்டதும், முந்திரிப் பருப்பை மிக்சியில் நைசாக அரைத்து சேர்க்கவும்.
ஏலக்காயைப் பொடி செய்து போட்டு குங்குமப்பூவை போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். முந்திரிப் பருப்பை சீவிப் போட்டு சூடாகவோ, குளிர வைத்தோ கப்புகளில் ஊற்றி பாயசத்தைப் பரிமாறவும். பார்ட்டிகளுக்கு ஏற்ற சுவையான ரிச்சான பாயசம் இது!