சனி, 11 மார்ச், 2017

வித விதமான சமையல்கள்


 மட்டன் கோலா

விடுமுறை நாளன்று குடும்பத்தினர் அனைவரையும் கவர இந்த மாறுபட்ட சிற்றுண்டியை செய்து பாருங்கள்.
தேவையானவை :
கொத்துக்கற
ி - 1/2
கிலோ, சின்ன வெங்காயம
் - 10,
பூண்ட
ு - 5,
கறிவேப்பில
ை -
சிறித
ு ,
மிளகாய் பொட
ி - 1/2
ஸ்பூன், தனியா பொட
ி- 1/2
ஸ்பூன் , மஞ்சள் தூள
் - 1/4
ஸ்பூன், உப்ப
ு -
தேவைகேற்ப, வறுத்த உடைத்த கடலை - 2 ஸ்பூன், பட்டை ௦- சிறிது, கிராம்பு - சிறிது, சோம்பு - சிறித
ு,எ
ண்ணெய் - தேவைகேற்ப
செய்முற
ை :
வறுத்த உடைத்த கடலை, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கொத்துக்கறியை தனித்தனியே நன்கு அரைத்துக்கொள்ளவும். இரண்டு கலவையையும் சேர்த்து அதனோடு வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா பொடி, உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

 #ஈஸியா
#கொழுக்கட்டை_செய்ய_சில_டிப்ஸ்.

1.  கொழுக்கட்டை க்கு மாவு கிளரும் போது சிலருக்கு மாவு கட்டி தட்டி விடும், இதனால் சரியாக சொப்பு செய்ய வராது, இதற்கு மாவினை தண்ணீரில் கெட்டியாக கரைத்து  கொண்டு வானிலியில்  1 கரண்டி நீரில் சிட்டிக்கை உப்பு, பால் 1 ஸ்பூன், நல்லண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து அது கொதித்ததும் கரைத்த மாவினை ஊற்றி கைவிடாமல் கிளறி ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி அதில் ஒரு பாத்திரத்தை போட்டு மூடிவிட்டு 1/2 மணி நேரம் கழித்து மாவினை எடுத்து நன்கு பிசைந்து கொழுக்கட்டை சொப்பு செய்தால் விள்ளாமல் விரியாமல் கொழுக்கட்டை செய்ய வரும்.

2. கையால் சொப்பு செய்ய வராவிட்டால் கரண்டி குழியின் வெளிப்புறம் எண்ணெய் தடவி மாவு வைத்து எடுத்து அதில் பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்யலாம்.

3.மேல் மாவு பிசையும் போது அதில் பால் (அ) வெண்ணெய் சேர்த்து பிசைய, கொழுக்கட்டை விரியாமல் பளபளப்பாக, சாப்டாக (soft) வரும்.


 அதிரசம்

தேவையான பொருட்கள் -
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு  தேவையான அளவு
செய்முறை -
பச்சரிசியை கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு துணியில் 20 நிமிடம் நிழலில் காய விடவும்.

பிறகு அந்த அரிசி லேசாக ஈர பதமாக இருக்கும் போதே மிக்சியில் நன்றாக பொடித்துக் கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக அரைத்தால் நன்றாக பொடியாகும்.

பொடித்த மாவை சல்லடையில் வைத்து சலித்துக் கொள்ளவும். அதோடு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து பொடித்த வெல்லத்தை போடவும். அதனுடன் சிறதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் வடிகட்டிய பாகை காய்ச்சவும். தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும்.

உருட்டு பதம் வர வரைக்கும் பாகை காய்ச்ச வேண்டும். பாகு பதம் தான் அதிரசம் செய்வதற்கு முக்கியமான ஒன்று. பதம் சரியாக வரவில்லை என்றால் எண்ணெயில் பொரிக்கும் பொது மாவு பிரிந்து போய் விடும் அல்லது அதிரசம் மிகவும் கடினமாக ஆகிவிடும்.
பதத்தை தெரிந்து கொள்வதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். வெல்லம் நன்றாக கொதித்ததும் சிறிது எடுத்து பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பாகு எப்போது தண்ணீரில் கரையாமல் மெதுவான பந்து போல உருட்ட முடிகிறதோ அது தான் உருட்டு பதம். அந்த பதம் வரும்வரை பாகை தண்ணீரில் ஊற்றி அவ்வபோது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உருட்டு பதம் வருவதற்கே முன்னரே அடுப்பை அணைத்து விட்டால் அதிரசம் பிரிந்து போய் விடும். அல்லது அந்த பதத்தை தாண்டி விட்டால் அதிரசம் கடினமாகி விடும்.
உருட்டு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பாகை அரிசி மாவின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டி வைத்து நன்கு கிளறவும். இரண்டும் நன்றாக சேரும் வரை கிளறவும்.

அந்த மாவை மூடி வைத்து ஒரு நாள் முழுதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் மாவு கொஞ்சம் கெட்டியாக அதிரசம் போடுவதற்கு ஏற்றது போல் இருக்கும்.

ஒரு வாழை இழை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி கவரில் வைத்து வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போடவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை சூடாக்கவும். நன்றாக சூடானது தீயை மிதமாக வைத்து தட்டி வைத்துள்ள மாவை எடுத்து போடவும். ஒரு புறம் சிவந்ததும் திருப்பி போடவும். மறு புறம் சிவந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் போடவும். அதிரசம் சீக்கிரமாக வெந்து விடும் அதனால் ஒரு ஒரு அதிரசமாக பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள் -
ஒரு நாள் கழித்து மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
250 கிராம் மாவுக்கு 10-13 அதிரசம் வரும். அதிரசதுக்கு நடுவே ஓட்டை போடாமலும் செய்யலாம்.
எண்ணெயில் பொரித்தவுடன் அதிரசம் நன்றாக உப்பி வந்தால் டிஸ்யு பேப்பர் வைத்து நன்றாக அமுக்கி எண்ணெயை எடுக்கவும்.


வாயுத்தொல்லையா? பூண்டு சூப் குடிங்க!

பூண்டை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன.

கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைகளின் எடை அதிகரிக்கும்.

இதில் சூப் வைத்தால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள்.

இதோ பூண்டு சூப்,

தேவையான பொருட்கள்

பூண்டுப் பற்கள் - 6

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 சிறியது

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லி இலை - சிறிது

புதினா - சிறிது

எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை

• வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

• ஒருகம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

• ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும்.

• பின்னர் அதில் சுட்ட பூண்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து, கட்டி வைத்துள்ள துணி முடிச்சை அதன் நடுவில் வைத்து, மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

• பின்னர், துணி மூட்டையை வெளியே எடுத்து, சூப்பிலேயே பிழிந்து விடவும்.

• அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

• தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி வைத்து, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.

• கடைசியாக உப்பு, மிளகுத்தூள், சிறிது புதினா இலையை சூப்பின் மீது தூவி பருகவும்.


"மஷ்ரூம் பிரியாணி  செய்யும் முறை

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி- 150 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மஷ்ரூம் - 150 கிராம்
சோயா சன்ங்ஸ்(chunks) - 50 கிராம்
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு

செய்முறை :

இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். சோயா சன்ங்ஸை கொதிக்கும் நீரில் போட்டு பிழிந்து வைத்துக் கொள்ளவும். மஷ்ரூமை 4 ஆக அறிந்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அறிந்து கொள்ளவும். சிறிது கொத்தமல்லி, புதினாவை தாளிக்க எடுத்து வைத்து கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.

அதில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, மஷ்ரூம், சோயா சன்ங்ஸை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் அரைத்த விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

பிறகு அரிசிக்கு தகுந்தவாறு தண்ணீர் ஊற்றவும். (1 டம்ளர் அரிசிக்கு 1 1 /2 டம்ளர் தண்ணீர்). அரிசியை முன்பே அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடவும்.

சிம்மில் வைத்து நன்கு வெந்ததும் அடுப்பை நிறுத்தவும். சுவையான மஷ்ரூம் சோயா பிரியாணி தயார்.


புளிக் காய்ச்சல்!!!

தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து  வறுக்கவும். வேர்க்கடலை (அ) முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும்.  மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால்,  தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.
குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

தோசை நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும்,ஜோதிடமும்
அக்னி -சூரியன்
அரிசி-சந்திரன்
உளுந்து -ராகு-கேது
வெந்தயம் -புதன்
தோசை கல் (இரும்பு)-சனி
தோசையின் நிறம்-செவ்வாய்
அதை உண்பவர்கள் குரு(ஆண்) ,சுக்கிரன்(பெண்)
இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே
தோசையை Clock vice சுட்டால் தான் வரும்,பிரபஞ்சம் சுற்றுவதும்
அப்படித்தானே
இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும் ஏன் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்
ஆரம்பத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டுவந்தர்கள்
ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக கோவில்
வழங்குகிறார்
அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.
பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.
தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,
( கல்லில் ) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு

கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்


 வீட்டில் எப்போதும் இட்லி சுட்டு போர் அடித்திருந்தால், அப்போது மைதா மாவைக் கொண்டு சு+ப்பரான முறையில் பணியாரம் செய்து சாப்பிடலாம். அதிலும் இதனை மாலை உணவாக செய்து சாப்பிடுவது மிகவும் எளிது. குறிப்பாக பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவும் கூட. இப்போது இந்த ஆரோக்கியமான கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரத்தை வீட்டில் இருந்தபடியே எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

கடலைப்பருப்பு - 2 கப்

மைதா மாவு - 2 கப்

தேங்காய் துருவல் - 1கப்

வெல்லம் - 2 கப் (பொடித்தது)

ஏலக்காய் - 6

நெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

🌺 முதலில் கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னா; அதனை நன்றாகக் கழுவி வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சு+டானதும், தேங்காய் துருவலுடன் தேவையான அளவு நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

🌺 பிறகு வேகவைத்த கடலைப்பருப்பு, வறுத்த தேங்காய் துருவல், ஏலக்காய், பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்தக் கலவையை சிறிய எலுமிச்சைப்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

🌺 பின்னர் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும். தயாராக வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் விட்டுக் கொள்ளவும், உருண்டைகளை கல்லில் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால், கடலைப்பருப்பு பணியாரம் தயார்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக