வேலூர் வாத்துக்கறி குழம்பு
வேலு}ர் மாவட்டம் என்றாலே பழங்கால நகரங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. பழங்கால நகரமான வேலு}ர் மாவட்டத்தின் பிரபலமான உணவாக வாத்துக்கறி திகழ்கிறது. இத்தகையச் சிறப்புப் பெற்ற உணவான வாத்துக்கறி குழம்பை வீட்டிலேயே சுலபமாகச் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
வாத்துக்கறி குழம்பு :
தேவையானப் பொருட்கள் :
வாத்துக்கறி - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 1ஃ2 கிலோ
தக்காளி - 4
தேங்காய் துருவல் - 1 கப்
பு ண்டு - 8 பல்
இஞ்சி - பு ண்டு விழுது - 2 ஸ்பு ன்
பட்டை - 2
கிராம்பு - 4
மிளகாய் தூள் - 2 ஸ்பு ன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பு ன்
மல்லி தூள் - 2 ஸ்பு ன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை :
🍗 வேலு}ர் வாத்துக்கறி செய்வதற்கு முதலில் வாத்துக்கறியை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு தவாவில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு வதக்கிய பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் ஆற வைத்து, பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும். அதேபோல் தக்காளியையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
🍖 பிறகு கேஸ் ஸ்டவ்வை ஆன் செய்து அதன்மேல் குக்கரை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, இஞ்சி பு ண்டு விழுது, சுத்தம் செய்த வாத்துக்கறி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூளைச் சேர்க்கவும். பிறகு வாத்துக்கறியிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு வாத்துக்கறி நன்றாக வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் ஏற்கனவே மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள வெங்காயக் கரைசலை ஊற்றி, அதனுடன் தேவையான அளவு நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். பிறகு அதில் தேவையான அளவு மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து எட்டு முதல் பத்து விசில் வரை விட்டு இறக்கினால் சு டான, டேஸ்டான வேலு}ர் வாத்துக்கறி குழம்பு ரெடி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக