ஞாயிறு, 12 மார்ச், 2017

கொள்ளு – பார்லி கஞ்சி



கொள்ளு – பார்லி கஞ்சி.

*தேவையானவை :*

பார்லி, கொள்ளு – கால் கப்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 3 பற்கள்,
பாதாம் பருப்பு – 6,
பால் – ஒன்றரை கப்.

*செய்முறை :*

•• கொள்ளு, பார்லியைத் தனித்தனியே ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும்.

•• பார்லி, வெந்தயம், கொள்ளு, பூண்டு, பால் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட வேண்டும்.

•• பாதாமை ஊறவைத்துத் தோல் உரித்து, மைய அரைக்க வேண்டும்.

•• பிறகு, தவாவில் வெந்த கஞ்சி, பாதாம் விழுது, பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்க வேண்டும்.

*குறிப்பு :*

எளிதில் செரிமானமாகும் உணவு இது. இதைத் தொடர்ந்துப் பருகிவந்தால், உடல் உறுதி பெறும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடனடி ஆற்றல் கிடைக்கும். குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்றது. வாரத்துக்கு ஒரு நாள் சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக