ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்.



புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்.


*தேவையான பொருட்கள் :*

கேரட் - 2
தக்காளி 2,
கருப்பு உப்பு - கொஞ்சம்,
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
புதினா இலைகள் - 10.

*செய்முறை :*

•• கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

•• கேரட், தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். நன்கு கூழாக அரைத்த பிறகு வேறு பவுலில் ஊற்றி கொள்ளவும்.

•• அரைத்த ஜூஸில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தவும்.

•• உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் கோடைகாலத்தில் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக