சனி, 25 நவம்பர், 2017

காராமணி-கேரட் சுண்டல்


காராமணி-கேரட் சுண்டல்

தேவையானவை:

 காராமணி - 200 கிராம்
 கேரட் - 2 (துருவிக் கொள்ளவும்)
 பெரிய வெங்காயம் - ஒன்று
 பச்சைமிளகாய் - 2
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 எண்ணெய் - 4 டீஸ்பூன்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்

செய்முறை:

காராமணியை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வேக வைத்துக் கொள்ளவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் நீளமாக நறுக்கவும். பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இத்துடன் பாதியளவு கேரட்துருவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இத்துடன் வேக வைத்த காராமணி சேர்த்து கலந்து, 5 நிமிடம் தீயைக் குறைத்து வைக்கவும். இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி, மீதியுள்ள கேரட்துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக