பலா இலை இட்லி
இது சத்து, சுவை, மணம் நிறைந்தது.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 2 கப்,
உளுந்து - 1 கப்,
வெந்தயம் - 1டேபிள்ஸ்பூன்
இஞ்சி,பூண்டு, மிளகு -2 டேபிள்ஸ்பூன்
எள் எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி,
உப்பு - தேவையான அளவு.
தொன்னை செய்ய:
பச்சைநிற பலா இலை,
தென்னை ஓலை - தேவையான அளவு
செய்முறை:
1.அரிசியையும், உளுந்தையும்+வெந்தயம், தனித்தனியாக ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
2.தேங்காயைத் துருவி, இஞ்சி, பூண்டு, மிளகுயையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
3.மூன்றையும் ஒன்றாக்கி உப்புப்,போட்டு கரைத்து புளிக்க வையுங்கள்.
4 குறைந்தது 6 மணிநேரம் புளிக்க வேண்டும்.எள் எண்ணெய்யை மாவில் ஊற்றி கரைத்து விடவேண்டும்.
5.தென்னை ஓலைகளை கிழித்துவிட்டு, மிஞ்சும் குச்சியை நன்கு கழுவி, சிறிது சிறிதாக ஒடித்துக் கொள்ளுங்கள்.
6.பலா இலைகளை கழுவி, இந்தக் குச்சி மூலம், நான்கு நான்கு இலைகளாக கோர்த்து தொன்னை செய்துகொள்ளுங்கள்.
7.மாவை இந்த தொன்னைகளில் ஊற்றி இட்லி சட்டியில் வைத்து வேக வையுங்கள்.
8.பலாயிலை வாசனை வரும்போது எடுத்து விடவேண்டும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக