புதன், 4 அக்டோபர், 2017

கொங்கு கிராமியத்து கார இட்லி


கொங்கு கிராமியத்து கார இட்லி

இது கொங்கு கிராமியத்து பகுதிகளில் மிகவும் பிரசித்தம்.

இன்று அழித்து விட்டது என்றும் கூறலாம்.

இதை எங்கள் ஆத்தா நான் சிறுவயதில் இருந்த போது செய்து கொடுக்கும்.

மிகவும் சுவை உடையதாக இருக்கும்.

ஒரு தடவை நீங்கள் செய்து பார்த்து விட்டு உங்கள் அணுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி 3 கப்
உளுந்து பருப்பு 2 கப்
வெந்தயம் 2 தேக்கரண்டி
குரு மிளகு 2 மேஜைகுகரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தயிர் 1 கப்
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பசு நெய் 1/2 கப்
கறிவேப்பில்ல கொஞ்சமாக பொடியாக நறுக்கியது
பெருங்காயம் சிறுதுளி
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை

1. அரிசி , உளுந்து , வெந்தயம் இவை மூன்றையும் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2. பிறகு ஆட்டுகல்லில் போட்டு நன்றாக கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும்.

3. மிளகு மற்றும் சீரகத்தை அம்மிகல்லில் ஒன்றுக்கு இரண்டாக பொடித்து கொள்ள வேண்டும். மிகவும் பொடியாக பொடித்து விட வேண்டாம்.

4. அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் , பெருங்காயம் , குரு மிளகு மற்றும் சீரகம் தூள், இஞ்சி-பூண்டு விழுது  தயிர் மற்றும் நெய் 1/4 கப் சேர்த்துகோங்க
நன்றாக கலந்து 12 மணிநேரம் புளிக்கவைக்கவும்.

5. இப்பொழுது இட்லி பாத்திரத்துல உள்ள இட்லி தட்டுகளிள் தொன்னையை வைக்க வேண்டும். தொன்னை என்பது ஒவ்வொரு ஊருக்கும் பெயர் வேறுபடும். அது கோயில்களில் சுண்டல், பிரசாதம் கொடுக்க பயன்படுத்தும் பொருள். இது மந்தாரை இலையில் செய்த பொருள். இதில் செய்தால் மணமும் சுவையும் கூடும்.

6. அதில் புளிக்க வைத்துள்ள மாவில் தேங்காய் துருவல் மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்றாக கலந்து  , பின்பு ஒரு கரண்டி மாவை எடுத்து தொண்ணையில் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி பசு நெய்யை மாவின் மேல் விட்டு விடவும்.

7. நன்றாக ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்க வேண்டும்.

8. பிறகு சுடச்சுட சுவையான கொங்கு கார இட்லி தயார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக