30 வகையான தீபாவளி ஸ்பெஷல் அல்வா வகைகள்
*1கேரட் பால் அல்வா*
குழந்தைகள் சத்தான உணவு சாப்பிட போராட்டம் செய்கிறார்களா? அவ்வப்போது கேரட் பால் அல்வா செய்து கொடுத்துப் பாருங்களேன். பால் குடிக்க மறுக்கும் குழந்தைகள்கூட இந்தப் பால் அல்வா விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியே அத்தியா வசிய ஊட்டச்சத்தான வைட்டமின் `ஏ` குழந்தைக்கு கிடைத்த மாதிரி இருக்கும். செய்முறை இதோ…
தேவையானவை
மசித்த கேரட் – ஒரு கப்
பால் – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – 1/2 கப்
முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை
* கேரட்டை நன்றாக துருவி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கேரட்டை அளந்து கொள்ளவும். ஒரு கப் மசித்த கேரட்டிற்கு மற்ற பொருட்களின் அளவு போதுமானது. முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
* கனமான வாணலியை காய வைத்து மசித்த கேரட், பால், சீனி, எல்லாவற்றையும் இட்டு கிளற வேண்டும். கலவை கெட்டியானதும் நெய் சிறிது சிறிதாக விடவும்.
* பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு கொண்டு வரும்போது இறக்கி வைத்து வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* இந்த கேரட் அல்வா விருந்தின்போது பரிமாற ஏற்றது.
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
*🌹2 திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி*
🍱தேவையான பொருட்கள்:
நெய் - 300 கிராம்,
கோதுமை - 200 கிராம்,
சீனி - 600 கிராம்
நெய் - தேவையான அளவு
நெய்யில் வருத்த முந்திரி - தேவையான அளவு
🍴செய்முறை:
இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள்.
கோதுமையை முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைக்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஓர் இரவு.
கோதுமை ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க வேண்டும். கோதுமையை அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு வெண்மையான துணியை வைத்து வடிகட்டி பாலை தனியாக எடுக்க வேண்டும். இது போல் அதிக பட்சம் மூன்று முறை பால் எடுக்கலாம். இந்த பாலை அப்படியே வைத்து விட்டால் கெட்டியான பால் அடியில் தங்கி நீர் மேலே வந்துவிடும் அந்த நீரை நீக்கி விடுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை சிறிது நேரம் கூட நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை சேர்த்து ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் ருசி அப்படியே இருக்கும்.🌹
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*3 ஆப்பில் ஹல்வா.:*
தேவையான பொருட்கள்.:
நல்ல இனிப்புள்ள சிகப்பு ஆப்பிள் – 3
நெய் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
மில்க் பௌடர் – 4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
முந்திரி - 8
செய்முறை.:
முதலில் ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் ஆப்பிள் துண்டுகளை போட்டு நீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு முந்திரியை துண்டுகளாக உடைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை போட்டு நன்றாக கிளறவும்.
மேலே சிறிது நெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.
பிறகு அதனுடன் மில்க் பௌடர், சர்க்கரை நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். பிறகு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.
பிறகு ஹல்வாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு அதன் மேலே முந்திரியை தூவி பரிமாறவும்.
சுவையான ஆப்பில் ஹல்வா ரெடி.
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
*4 கரும்புச்சாறு கேரட் அல்வா.:*
தேவையான பொருட்கள்.:
கேரட் துருவல், கரும்புச்சாறு - தலா ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான நட்ஸ் (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை.:
வாணலியில் நெய் விட்டு சூடாக்கி கேரட் துருவலைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.
பிறகு அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து இதனுடன் கரும்புச்சாறு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி நன்கு சுருள வேகவிடவும்.
கடைசியில் விருப்பமான நட்ஸ், டூட்டி ஃப்ரூட்டி தூவி இறக்கிப் பரிமாறவும்.
வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் கரும்பு செழித்து வளரும்.
⛱⛱⛱⛱⛱⛱⛱⛱⛱⛱
*🌹5 பச்சரிசி அல்வா*
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பச்சரிசி மாவு3 கப்
கடலை பருப்பு 1 கப்
வெல்லம் ஒன்றரை கப்
நெய் தேவைக்கேற்ப
முந்திரி15
ஏலக்காய் பொடி4 சிட்டிகை
செய்முறை :
அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைபருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பருப்பு குழையாமல் ஒரளவு திடமாக இருக்க வேண்டும். வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
பருப்பு வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள அரிசிமாவை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்து வரும் வேலையில் கொதிக்க வைத்த வெல்ல தண்ணீரை சேர்த்து கிளறவும்.
பிறகு முந்திரி, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும். இப்போது பச்சரி அல்வா தயார்.🌹
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
*🌹6 கேழ்வரகு அல்வா*
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது சத்தான கேழ்வரகு அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 300 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரி பருப்பு - 100 கிராம்
செய்முறை :
🍚 கேழ்வரகு மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும். சர்க்கரையை காய்ச்சி வடிக்கட்டிக் கொள்ளவும்.
🍚 அதன் பின்பு திராட்சை, முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். வடிகட்டிய சர்க்கரை பாகில் மாவு கலவையை கலக்கி வேக விடவும். இதில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் அல்வாவை கொட்டவும். பின்பு துண்டுகளாக்கி பரிமாறவும். சுவையான கேழ்வரகு அல்வா தயார்.🌹
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
*7 .ராகி பூசணிக்காய் அல்வா.:*
தேவையானபொருட்கள்.
கேழ்வரகு மாவு – ¼ கிலோ,
வேர்க்கடலை - 100 கிராம்,
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை,
முந்திரி – 10,
சர்க்கரை - ¼ கிலோ,
நெய் – ½ கப்,
வெள்ளைப் பூசணி - 100 கிராம்,
பால் - ஒரு கப்.
செய்முறை.;
முதலில் கேழ்வரகு மாவை சுத்தம் செய்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வறுத்த கேழ்வரகை ஆறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலந்து கொள்ளவும்..
கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் நறுக்கிய வெள்ளை பூசணித் துண்டுகளைச் சேர்த்து, வேக வைக்கவும்.
இதனுடன், சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும்.
பின்னர் வேர்கடலை ,முந்திரி ,திராட்சை இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான ராகி பூசணிக்காய் அல்வா ரெடி.
ராகியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் எலும்புகள் பலமடையும்.அலர்ஜி,ஒவ்வாமை,போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
*🌹8. கேரட் அல்வா சுவையாக செய்ய வேண்டுமா ?*
👉 முறுக்கு, மிக்ஸர் போன்ற பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.
👉 இனிப்பு சோமாஸ் செய்யும்போது பூரணத்தில் சிறிது பால் பவுடர் கலந்து செய்தால் அருமையான சுவை கிடைக்கும்.
👉 ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
👉 ஓட்ஸ் லட்டு பிடிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்தால் அருமையாக இருக்கும்.
👉 அரிசியில் பலகாரங்கள் செய்யும் போது அரிசியை களைந்து, காய வைத்து அரைத்து, பலகாரங்கள் செய்தால், பலகாரங்கள் நல்ல சுவையுடன், உடையாமல் இருக்கும்.
👉 காராபூந்தி தேய்க்கும் பொழுது எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உருண்டையாக வரும்.
👉 கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
👉 கேசரி கிளறும்போது முந்திரி, பாதாம், பிஸ்தா பொடித்து வறுத்துச் சேர்க்கலாம். அல்லது பாதாம் பவுடர் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
👉 முறுக்கு மாவு பிசையும் பொழுது சிறிது சிறிதாக மாவு எடுத்து பிசைந்து செய்தால் வெள்ளை நிறத்தில் சிவக்காமல் இருக்கும்.
👉குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கட் ரெடி.🌹
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*9. திருவையாறு ஆண்டவர் கடை அசோகா அல்வா*
பாசிபருப்பு நன்றாக வேக வேண்டும் என்பது மிக முக்கியமானது அப்பொழுது தான் அல்வா மிருதுவாக இருக்கும்.
ஆண்டவர் கடை அசோகா அல்வா என்பது நெல்லை இருட்டு கடை அல்வாவின் தங்கை என்று கூறலாம்.
சும்மா ஆரஞ்சு கலர்ல பளபளபன்னு நெய்யில் அல்வாவை முழுவதும் மின்ன இடை இடையே நெய்யில் வறுத்த முந்திரியும் திராச்சையும் எட்டி பார்க்க ;
கோதுமையும், பாசி பருப்பும் அதை வழுவழுவென்று ஆக்கி இருக்க என்ன அல்வா தண்ணீரில் மிதக்கிறதா அல்லது நெய்யில் நீச்சல் இருகிறதா என்று நினைக்கும் படியாக ஒரு வாய் போட்டாலே சும்மா ஜிவ்வூனு சுவை உடம்பு முழுவதும் சுவை நரம்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் போதை ஏற்ற வேண்டும். அதே போல் நாவில் வைத்த உடன் வழுக்கி கொண்டு வயிற்றை தஞ்சமடைய வேண்டும்.
தேவையான பொருட்கள்
பாசிபருப்பு 1/2 கப்
கோதுமை மாவு 1/4 கப்
பசு நெய் 1/4 கப் + 3 மேஜைக்கரண்டி
சர்க்கரை 1 1/2 கப்
ஏலகாய் தூள் 1/4 தேக்கரண்டி
கேசரி பொடி 1 சிட்டிகை
முந்திரி பருப்பு 15
செய்முறை
1. ஒரு வடச்சட்டியில் பாசிபருப்பை நன்றாக மணம் வீசும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பொன்னிறமாக ஆகும் வரை வறுக்ககூடாது
2. இப்பொழுது பிரஷர் குக்கரில் வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு உடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக மசியும் வரை வேக வைக்க வேண்டும்.
3. அதை மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
4. இப்பொழுது வடச்சட்டியில் 1 1/2 மேஜைக்கரண்டி பசு நெய்யை விட்டுகோங்க அது நன்றாக காய்ந்ததும் அதில் முந்திரி பருப்பை சேர்த்துகோங்க பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
5. மீதமுள்ள காய்ந்த நெய்யில் கோதுமை மாவை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக மற்றும் மணம் வீசும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
6. கோதுமை மாவின் பச்சை வாசனை போனதும் அதில் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பாசிபருப்பு கலவையை சேர்த்துகோங்க .
7. இச்சமயத்துல அதில் சர்கரையை மெதுவாக சேர்த்துகோங்க மிதமான தீயில் அதை கிளறுகையில் கலவை கொஞ்சம் தண்ணீர் பதத்திற்கு வந்து விடும்.
7. இந்த சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாக பசு நெய்யை விட்டுகோங்க நன்றாக குழைய குழைய சிறுதீயிலேயே கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
8. அதில் கேசரி பொடியை சேர்த்துகோங்க நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
9. இப்பொழுது அல்வா கலவை திக்காக மாறும் சமயத்துல அதில் மீதமுள்ள அனைத்து பசுநெய்யையும் சேர்த்துகோங்க , அதனுடன் ஏலகாய் தூள் மற்றும் நெய்யில் பொன்னிறமாக வறுக்கபட்ட முந்திரி பருப்பை சேர்த்துகோங்க நன்றாக கிளற வேண்டும்.
10. உங்கள் கைகளில் அல்வாவை எடுத்தால் அது உங்கள் கைகளில் ஒட்டகூடாது அது மட்டுமல்ல நெய் அல்வா கலவையில் இருந்து பிரிந்து வரும். அதுவே அடுப்பை அணைக்க சரியான பதமாகும்.
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
*10. நாவில் கரைந்தோடும பாம்பே அல்வா | சோள மாவு அல்வா*
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வாவை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
செலவும் குறைவு😊செய்வதும் எளிது
தேவையானவை:
வெள்ளை சோள மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1/4 கப்
முந்திரி,பாதாம் நறுக்கியது – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு. - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
கேசரி பவுடர் – 1 சிட்டிகை
செய்முறை:
1.முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன்
2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
2.பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
3.பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும் .
4.பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகமல் பார்த்துக் கொள்ளும்.
5.சர்க்கரையானது நன்கு கரைந்து,சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளரவும்.
6.அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.
7.அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
அல்வா பதம் என்பது அல்வாவில் இருந்து நெய் கசிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
8.ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, பாதாமை தூவி அதனை துண்டுகளாக்கினால் சுவையான சோளமாவு | பாம்பே அல்வா ரெடி!!
🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓
*11. சுவையான மாம்பழ அல்வா*
கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். எனவே மாம்பழத்தில் அல்வா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரையும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்விக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பழுத்த மாம்பழத் துண்டுகள் - 3 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 2 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
மாம்பழத் துண்டுகளை நன்றாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். மசித்து வைத்த மாம்பழங்களுடன் சர்க்கரையைப் போட்டு கிளறவும்.
பின்னர் பால் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் இருக்க நெய்யை சேர்த்து கிளறவும்.
அதன்பின் கெட்டியான பதத்தில் வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு. ஆறிய பிறகு சிறுத் துண்டுகளாக வெட்டினால், சுவையான மாம்பழ அல்வா ரெடி!
📕📕📕📕📕📕📕📕📕📕
*12. கோதுமை அல்வா*
தேவையானவை:
கோதுமை - 2 கப், பாதாம் பருப்பு - 100 கிராம், முந்திரி - 100 கிராம் (நெய்யில் சிவக்க வறுத்து ஒன்றிரண்டாக உடைக்கவும்), நெய் - 2 கப், சர்க்கரை - 5 கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
கோதுமையை முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் காலை கிரைண்டரில் நைஸாக அரைத்து பால் எடுக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு 3 முறை பால் எடுக்கவும்.
பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, தோலெடுத்து, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். கோதுமைப் பாலில் தெளிந்த நீரை இறுத்துவிடவும்.
அடிகனமான வாணலியில் ஒன்றரை கப் நீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கெட்டிக் கம்பிப் பாகாகக் காய்ச்சவும். அரைத்த பாதாம் பருப்பைக் கோதுமைப் பாலுடன் சேர்த்து, வாணலியிலுள்ள சர்க்கரைப் பாகில் ஊற்றிக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் குங்குமப்பூ, கேசரி பவுடர் சேர்த்து கரைத்து விட்டு, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். நெய் தனியே பிரிந்து சுருண்டு வரும் சமயம் முந்திரி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
📘📘📘📘📘📘📘📘📘📘
*13. பாதாம் அல்வா*
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பாதாம் பருப்பு1 கப்
முந்திரிப் பருப்பு10
சர்க்கரை1 கப்
பால்1டேபிள் ஸ்பூன்
நெய் அரை கப்
ஏலப்பொடி 3 டீஸ்பூன்
குங்குமப் பூ1 சிட்டிகை
கேசரி கலர்2 சிட்டிகை
வெள்ளரி விதை 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
பாதாம் பருப்பு மற்றும் முந்திரிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பாதாமை தோலுரித்துக் கொள்ளவும்.
பின் இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும். பருப்பும் சர்க்கரையும் சேர்ந்தவுடன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, கரைத்து கலவையில் சேர்க்கவும்.
கலவை இறுக ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும். பிறகு கலவை நன்றாக இறுகி நெய் வெளியே வரும்போது இறக்கி வெள்ளரி விதை சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான பாதாம் அல்வா தயார்.
📙📙📙📙📙📙📙📙📙📙
*14. அவல் - ஜவ்வரிசி பால் அல்வா*
தேவையான பொருட்கள்:
அவல் - 2 கப்
ஜவ்வரிசி - 2 கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
மில்க்மெய்டு - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
குங்குமப்பூ - தேவைப்பட்டால் சிறிது.
பால் - ஒரு கப்
முந்திரி, பாதாம் - தலா ஒரு டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
1. ஜவ்வரிசையை முதலில் வறுத்துக் கொள்ளவும்.
2.அதில் கணிசமான அளவை எடுத்து பொடி செய்து கொள்ளவும்.
3.பிறகு நெய் விட்டு அவலை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
4.பிறகு வறுத்த ஜவ்வரிசி, பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
5. பிறகு வறுத்த அவலை போடவும். மில்க்மெய்டை இப்போது சேர்க்கவும்.
6.பிறகு அல்வா போல் சற்றே கெட்டியாக வந்தவுடன் ஏலாக்காய்த் தூளைச் சேர்த்து இறக்கவும்.
7.வேண்டுமெனில் முந்திரியை போட்டுக் கொள்ளலாம்.
📗📗📗📗📗📗📗📗📗📗
*15. பாசிப்பருப்பு அல்வா.:*
தேவையான பொருட்கள்.:
பாசிப்பருப்பு மாவு - ஒரு கப், ஜவ்வரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - ஒரு கப்,
சர்க்கரை - 2 கப்,
சிவப்பு ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு.
செய்முறை.:
பாசிப்பருப்பு மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைக்கவும்.
அடி கனமான வாணலியில் மாவுக் கரைசல், சர்க்கரை, ஃபுட் கலர் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்து, நன்றாகக் கிளறிவிடவும்.
நெய்யை விட்டுக்கொண்டே மேலும் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.
பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.
மேலாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைப் பதித்து வைத்தால் பாசிப்பருப்பு அல்வா ரெடி.
இதை துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.
📒📒📒📒📒📒📒📒📒📒
*16. ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா*
என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 50 கிராம்
முந்திரி - 10
திராட்சை - 10
குங்குமப்பூ - சிறிதளவு
பால் - 100 மிலி.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை மேலோட்டமாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். முந்திரி, திராட்சை இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக்கி நெய்விட்டு வறுத்துக் கொள்ளுங்கள். ஊறிய பாசிப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, பால், குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் வெண்ணெய் பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரையில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். பாகு கம்பி பதத்துக்கு வந்ததும் பாசிப்பருப்பு விழுதைப் போட்டு, சிறிது, சிறிதாக நெய்விட்டு அடிப்பிடிக்காமல் கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்குங்கள். மணமும் சுவையும் நிறைந்த ஆந்திர ஸ்பெஷல் பருப்பு அல்வா ரெடி!
📓📓📓📓📓📓📓📓📓📓
*17. குக்கர் அல்வா*
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1கப்
சர்க்கரை - 2கப்
நெய் - 100மில்லி
வெஜிடபிள் ஆயில் - 100மில்லி
முந்திரி பருப்பு - 50கிராம்
கேசரி கலர் - 1சிட்டிகை
செய்முறை :
1.கோதுமை மாவை நன்கு சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.
2.அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.
3.குக்கரின் உள்ளே இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் மாவு கரைத்த பாத்திரத்தை வைத்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து மாவை வேக வைக்க வேண்டும்.
4.இரண்டு விசில் வந்த உடன் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
5. 5நிமிடம் கழித்து குக்கரின் உள்ளே உள்ள பாத்திரத்தை வெளியே எடுத்து ஆற விட வேண்டும்.
ஆறிய மாவை கட்டி இல்லாமல் மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கூழ் போல் கரைத்து கொள்ள வேண்டும்.(மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றினால் கட்டி இல்லாமல் கூழாகிவிடும்)
6.வாணலியை அடுப்பில் வைத்து 200மில்லி தண்ணீர் ஊற்றி அதில் கேசரி கலர்,2கப் சர்க்கரையை சேர்த்து சூடு படுத்த வேண்டும்.
7.பக்கத்து அடுப்பில் ம்ற்றொரு வாணலியில் 200மில்லி வெஜிடபிள் ஆயில் ஊற்றி நன்கு சூடான உடன் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
8.சர்க்கரை , கேசரிகலர் சேர்த்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் 100மில்லி நெய்யை ஊற்றி நெய் கரைந்த உடன் வெந்த மாவை சேர்த்து அடி பிடிக்காமல் கிண்ட வேண்டும்.
9.ஊற்றிய நெய்யை மாவு உறிஞ்சிய பின் பக்கத்து அடுப்பில் உள்ள நன்கு சூடான வெஜிடபிள் ஆயிலை ஒரு கரண்டி கொண்டு எடுத்து கிண்டும் மாவில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கை விடாமல் கிண்ட வேண்டும்.
10.கொதிக்கும் ஆயில் முழுவதும் இதே போல் ஊற்றி கிண்டி கொண்டே இருக்கும் பொழுது மாவும் ஆயிலை உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.
11.சிறிது நேரத்தில் வெந்த மாவு ஆயிலை வெளியே விட ஆரம்பிக்கும் பக்குவத்தில் 50கிராம் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும்.
12.கிண்டிய அல்வாவை ஒரு தட்டில் கொட்டி பரத்தி முந்திரியால் அலங்கரிக்கலாம்.
📔📔📔📔📔📔📔📔📔📔
*18. வீட் ரவா பைனாப்பிள் அல்வா.:*
தேவையான பொருட்கள்.:
கோதுமை ரவை – ஒரு கப், பைனாப்பிள் விழுது, சர்க்கரை – தலா ஒன்றரை கப்,
வறுத்த முந்திரி துண்டுகள் – 15, குங்குமப்பூ – 4 அல்லது 5 இதழ்கள்,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை.:
கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை ரவையை சேர்த்து சூடுபட கிளறவும்.
பிறகு, ரவை மூழ்கும் அளவுக்கு சுடு நீர் விட்டு கிளறவும்.
கெட்டியாகி வந்ததும் சர்க்கரை, பைனாப்பிள் விழுது, சேர்த்துக் கிளறவும். பிறகு, குங்குமப்பூ சேர்க்கவும். இறுகி கெட்டியாக வந்ததும் முந்திரி துண்டுகள் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
குறிப்பு.:
கிளறும் கரண்டியில் எடுத்தால் தானாக ‘தொப்’பென்று விழ வேண்டும். இதுதான் சரியான அல்வா பதம்.
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
*19. ❤️சுவையான கேரட் அல்வா ❤️*
தேவையானப்பொருட்கள்
டெல்லி கேரட் : 1கிலோ
பால் : 500மிலி
சர்க்கரை : 400 கி
நெய் : 50கி
முந்திரிப்பருப்பு : 20 கி
செய்முறை :
1. கேரட்டை நன்றாக தோல் சீவி கழுவி மெல்லிசாக துருவவும்.
2. அடி கனமான கடாயில் துருவிய கேரட்டை போட்டு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் ஏற்றி மூடி வைத்து மிதமான தீயில் கேரட்டை வேகவிடவும்.
3. கேரட் நன்றாக வெந்து பால் நன்றாக வற்றியவுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
4. சர்க்கரை நன்றாக கரைந்த உடன் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.
5. கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் போது நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அனைக்கவும்.
6. அரைமணி நேரம் கழித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் .
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
*20. சுவையான பால் அல்வா*
தேவை
கெட்டியான பால் – 5 கப்
சர்க்கரை – 2 கப்
வெண்ணெய் – 2 டே. ஸ்பூன்
செய்முறை
கெட்டியான பாலை அடிபிடிக்காமல் காய்ச்சித் திரட்டவும். சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒட்டாமல் வரும் போது, வெண்ணெயைச் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் இட்டு ஆறியதும் வில்லைகளாகப் போடவும்.
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
*21. சுவையான மைதா அல்வா*
தேவை
மைதா மாவு – 100 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
நெய் – 150 கிராம்
பிடித்தமான கலர் எஸென்ஸ்
வறுத்த முந்திரி – சிறிதளவு
செய்முறை
சர்க்கரை கம்பிப் பாகில் கரைத்த மைதா மாவைக் கொட்டி, இதர பொருட்களைச் சேர்த்து கிளறி சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
*22. சுவையான பிரெட் அல்வா*
தேவை
பிரெட் துண்டுகள் – 5
மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்
வேகவைத்து மசித்த பயத்தம் பருப்பு – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரைத் தூள் – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம், எஸன்ஸ் – தேவையான அளவு
செய்முறை
பிரெட், பால் மசித்த பருப்பு, உருளைக்கிழங்க, சர்க்கரைத்தூள் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் ஏற்றிப் பதமாகக் கிளறவும். சுருண்டு வந்ததும் நெய், முந்திரி, திராட்சை, எஸன்ஸ் சேர்த்துக் கிளறவும்.
பிரெட் அல்வா என்று சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். ‘பாதாம் அல்வா’ என்றே நினைப்பார்கள்.
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
*23. சுவையான கார்ன் அல்வா*
தேவை
மக்காச் சோள மாவு – 1 கப்
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 2 கப்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – 1 டீஸ்பூன்
திராட்சை – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் – தேவையான அளவு
செய்முறை
மக்காச் சோள மாவுடன் 11/2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி சர்க்கரை மீதமுள்ள தண்ணீர் சேர்க்கவும்.
பாகு பதத்தில் வந்தவுடன், சோள மாவினை சேர்த்துக் கிளறி விடவும்.
இதனை கிளறிக் கொண்டோ முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், நெய், எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளறவும்.
இந்தக் கலவை உருண்டு திரண்டு வரும்போது, இதனை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
முந்திரியால் அதன் மேல் அலங்கரித்து, ஆறியதும் நமக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.
🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭
*24. ஸ்பெஷல் அவல் அல்வா*
தேவை
கெட்டி அவல் – 1/2 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 கிராம்
ஏலம், முந்திரி – தேவையான அளவு
செய்முறை
நெய்யில் வறுத்து பொடித்த அவலை நெய்யுடன் சர்க்கரைப்பாகில் போட்டுக் கிளறி முந்திரி ஏலம் தூவி இறக்கவும். இது தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக அமைந்து விடும்.
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
*25. பூசணிக்காய் அல்வா*
தேவை
பூசணிக்காய் – 1/2 கிலோ
நெய் – 175 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் – 1 சிறிய டம்ளர் (அ) சர்க்கரை இல்லாத கோவா – 200 கிராம்
ஏலப்பொடி – 1 ஸ்பூன்
ஒடித்த முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
கேசரிப் பவுடர் – 1/4 ஸ்பூன்
தண்ணீர் – 11/2 கரண்டி (கோவா போடும் பட்சத்தில்)
செய்முறை
பூசணிக்காயின் தோலைச் சீவி, குடல் பகுதியை அகற்றி விட்டு, அலம்பித் துருவிக் கொள்ளவும்.
பூசணிக்காயைத் துருவும் பொழுது, தண்ணீர்ச்சத்து நிறைய வெளியேறும். ஆனால் அது உபயோகப்படாது.
சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, அதிலேயே துருவிய பூசணியைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கிய பூசணித் துருவலை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும்.
சிலர் துருவலாகவே வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்கள்.
அடுப்பில் சிறிதளவு நெய்யை விட்டு விழுதைப் போட்டு, சர்க்கரையைச் சேர்க்கவும்.
நெய்யைச் சுட வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை + விழுதுடன் சேர்க்கவும். கிளறிக் கொண்டு இருக்கவும்.
மேற்கொண்டு, கன்டென்ஸ்ட் மில்க் அல்லது கோவாவாக இருந்தால், தண்ணீரில் கரைத்தாற்போல் செய்து கொண்டு கலவையில் சேர்க்கவும்.
கேசரிப் பவுடர், ஒடித்த முந்திரி, ஏலப்பொடி எல்லாவற்றையும் போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல், சுருள வரும் பதத்தில் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, ஆறியவுடன் வில்லைகளாகப் போடவும்.
கோவாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்ப்பதற்குப் பதில் பூசணித் தண்ணீரைக் கூட உபயோகப்படுத்தலாம். இதை ‘காசி அல்வா’ என்றும் சொல்வார்கள்.
🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑
*26. தாஹினி அல்வா*
தேவை
சர்க்கரை – 300 கிராம்
தண்ணீர் – 100 மி.லி.
எள்ளு – 300 கிராம்
எசன்ஸ் – தேவையெனில்
பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை – 1/4 கப் தேவையெனில்
செய்முறை
பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீரில் இட்டு கரைத்து மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும் பாகு பதம் வரும் வரை பதம் வந்ததும் அத்துடன் வறுத்து தோலுரித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றை கொட்டி நன்கு கிளறவும். வாசனை தேவையெனில் எசன்ஸ் 1/2 ஸ்பூன் (வெனிலா) விட்டு கிளறவும். இந்த ஒரு பாத்திரத்தில் எள்ளை போட்டு அதில் இந்த கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். வேகமாகவும் பத்திரமாகவும் கிளற வேண்டும். நன்கு கிளறி அதனை ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பி விட அது அப்படி கட்டியாகவும் ஆறி மொறுமொறுப்பாகவும் வந்து விடும். இதனை தேவையெனில் முதலிலேயே சதுரம் சதுரமாக வெட்டியும் விடலாம். இதுவே தாஹினி அல்வா.
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉
*27. முந்திரிப் பருப்பு அல்வா*
தேவையான பொருட்கள் :
தூளாக்கிய
முந்திரிப் பருப்பு - ஒரு கப்
மைதா - ஒரு கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 2 கப்
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மைதாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்புத் தூளையும், சர்க்கரையை யும் சுத்தமான வாணலியில் போட்டு கிளறவும். சர்க்கரை உருகத் தொடங்கியதும் மைதா மாவை அதோடு சேர்க்கவும். மாவை கிளறிக் கொண்டே சிறிது சிறிதாக நெய்யை அதோடு சேர்க்கவும். கலவை வாணலியின் ஓரத்தில் ஒட்டாத நிலை வரும்வரை இவ்விதம் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒட்டாத நிலை வந்ததும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்தக் கலவையை கொட்டி சமமாகப் பரப்பி, ஓரளவு ஆறியதும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍
*28. சுவையான பீட்ரூட் அல்வா*
தேவையானப்பொருட்கள்:
பீட்ரூட் – 1
பால் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
நெய் – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் – ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு – 10
செய்முறை:
பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் இன்னுமொரு டீஸ்பூன் நெய் விட்டு, அத்துடன் பீட்ரூட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். பீட்ரூட் ஈரப்பசையில்லாமல் நன்கு வதங்கியவுடன் பாலைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து பால் சுண்டி பீட்ரூட் கலவையுடன் நன்றாகச் சேர்ந்தப் பின் சர்க்கரையைச் சேர்க்கவும். கை விடாமல் அல்வா கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கெட்டியானவுடன் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய், ஜாதிக்காய் தூள்களையும், வறுத்த முந்திரியையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
*29. சுவையான பால்கோவா*
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை :
பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு அது கெட்டியான பதத்திற்கு இறுகும் வரை கொதிக்க விட வேண்டும். பால் அடி பிடிக்காமல் இருக்க அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்கு இறுகி க்ரீமியான நிலையை அடையும்போது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கொண்டே இருந்தால் பால்கோவா நிலையை அடையும். பின் அதில் முற்றிலும் நீர் இறுகி கட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இறுகிய நிலை அடையும் போது நெய் ஊற்றிக் கிளறி இறுதியாக, ஏலக்காய்ப் பொடி தூவிப் பரிமாறலாம்.
சூப்பரான பால்கோவா தயார்.
🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽
*30. மன்னார்குடி டேட்ஸ் அல்வா*
என்னென்ன தேவை?
பால் பேணி / பதுர் பேணி - 2, பால்கோவா (இனிப்பு கோவா) - 200 கிராம், பால் - அரை லிட்டர், முந்திரி - 100 கிராம், பேரீச்சம் பழம் - 200 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு.
எப்படிச் செய்வது?
முந்திரியை ரவை போல ஒன்றிரண்டாக பொடிக்கவும். பேரீச்சம் பழத்தை பாதி பொடியாக நறுக்கியும், மீதியை மிக்ஸியில் போட்டு சிறிது பொடித்தும் வைக்கவும். நறுக்கிய மற்றும் துருவிய பதத்தில் இருக்கும் பேரீச்சையை நெய் விட்டு லேசாக வறுத்து வைக்கவும். சிறிது
முந்திரியையும் நெய்யில் வறுத்து வைக்கவும் (அலங்கரிக்க). அடிகனமான பாத்திரத்தில் பால் விட்டு சூடானதும், பால்கோவா போட்டு நன்கு கிளறவும். பொடித்து வைத்த பேரீச்சம் பழம் சேர்த்து, முந்திரி பவுடர், எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். பால் பேணியைப் பொடித்து, இத்துடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், அடுப்பிலிருந்து அகற்றி, மேலே சிறிது பேரீச்சை, முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
உங்கள் கவனத்துக்கு...
* நெய் வறுப்பதற்கு மட்டும் போதுமானது. அதிகம் தேவைப்படாது.
* கலர் பவுடர் தவிர்க்கலாம், விரும்பினால் சிறிது ஆரஞ்சு கலர் சேர்க்கலாம்.
* பால்கோவா, முந்திரி, பேரீச்சையின் இனிப்புகளே போதும். தனியாக சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.
அல்வா 600!
கிழக்கு ஆப்பிரிக்காவில் Dodol எனும் அரிசி மாவில் செய்யப்பட்ட அல்வா.
இதுபோன்ற நட்ஸ் அண்ட் பட்டர் வகை அல்வாக்கள் பல்ஜீரியா, ரஷ்யா, எகிப்து நாடுகளில் மிகப் பிரபலம்.
நம்ம ஊர் சோன்பப்டி ஸ்டைலில் இருக்கும் Floss Halva துருக்கியின் பாரம்பரிய உணவு. எள்ளை வைத்து செய்யப்படும் தஹினி அல்வா... துருக்கி, போலந்து போன்ற நாடுகளில் விருப்ப இனிப்பு.